Friday 11 January 2013

பேரிடர் மேலாண்மை திட்டமும் அமுலாக்கமும் குறித்த அகில இந்திய கருத்தரங்கு…National Summit on Disaster Management.


இந்திய பேரிடார் மேலாண்மை அமைப்பின் சார்பில் டிசம்பர் 18, 19 களில் பேரிடர் மேலாண்மை தொடர்பில் பனிபுரியும் அமைப்புக்கள்,  அரச அலுவலகர்கள், பேரிடர் அபாயம் நிறைந்த தொழில் நிறுவனங்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொண்டு நிறுவங்களுக்கான  கலந்தாய்வு ஒன்றினை தலைநகர் டெல்லியில் Habitat Center  உள்ளரங்கில் நடத்தினர். இந்த நிகழ்வில் ஸ்கில்ஸ் இந்தியாவின் சார்பில் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வினை இந்திய பேரிடர் மேலாண்மை அமைப்பின் துணை இயக்குனர் திரு, சசிதரூர் ரெட்டி அவர்கள் ஆரம்பித்து வைக்க நிகழ்வின் கலந்து கொண்ட கருத்துரையாளர்கள் அனைவரும் தங்களது நிறுவத்தின் மூலமானதாகவும் அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பின் மூலமாகவும் கடந்த காலங்களில் பேரிடர் குறித்து மேற்கொண்ட பணிகளை விளக்கினர்.

நிகழ்வில் முதல் அமர்வில் பேரிடர் மேலாண்மையில் உள்ள பிரச்சனைகளை குறித்த விவாதம்.
நிகழ்வின் முதல் அமர்வு பேரிடர் மேலாண்மையில் உள்ள முக்கிய பிரச்சணைகளும் அதை எதிகொள்வதில் உள்ள சவால்கள் குறித்ததாக அமைந்தது. இதனை குஜராதின் உள்துறை அமைச்சின் இயக்குனர் திரு. மிஸ்ரா அவர்கள் வழிநடத்த அந்த அமர்வில் Mr.V.K.Singh, Director of Asia Simpler- Lean healthcare Excellence,  Mr.Kuldip Nar –Managing Director Aidmatrix India, Dr.Angeli Qwatra –Founder Philanthrope, Mr.Sukhwinder Sayal –Corporate Security Professional IBM India, Dr.Krishna S Vatsa –Regional Disaster Reduction Advisor South and South west Asia UNDP  ஆகியோர் பேரிடர் மேலாண்மையில் உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்தும் இந்தியாவில் இதை எதிர்கொள்ள உள்ள சவால்கள் குறித்தும் தங்கள் அறிக்கைகளை சமர்பித்தனர் முடிவில் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அதுதொடர்பான வினாக்களை எழுப்ப அவற்றுக்கான விளக்கங்களை துறை சார்ந்தவர்கள் வழங்கினர்.

மதிய உணவின் பின்னரான இரண்டாவது அமர்வில் பேரிடர் சூழ்நிலைக்கு தயாரவது குறித்த செயற்பாட்டு விளக்கத்துக்கான ஏற்பாட்டினை செய்தனர் அந்த அமர்வினை Dr. Muzaffer Ahmad –National Disaster management Member. அவர்கள் வழி நடத்தினார். அவருடன் Mr. Sandeep Rai Rathore –Inspecter General National Disaster Response Force & Civil Defence (NDRF&CD) ஆகியோர் பங்கேற்றனர்.  அதன் பின்னர் ஒருசெயற்பாட்டு முறையான விளக்கம் அளிப்பதற்காக பங்கேற்பாளர்களை இரு வேறு எண்ணை உற்பத்தி ஆலைகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், போலிஸ், தீயணைப்புத்துறை, பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள் என்ற பிரிவுகள் பிரிக்கப்பட்டு இரு வேறான பேரிடர் நிலைகளில் ஒரு பொறுப்பாளர்களான ஓவொருவரும் எவ்வாறான செயற்பாடுகளில் இறங்குவீர்கள் என்பதை விளக்கும் படி கேட்கப்பட்டது. மாலை பேரிடர் மீட்பு பணிகளுக்கான பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும், பேரிடர் பணியாற்றும் சர்வதேச மற்றும் இந்திய அமைப்புக்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து அது தொடர்பான விளக்கத்தினை பங்கேற்பாளர்களுக்கு அளித்தனர்.

மறுநாளின் முதல் அமர்வு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் பேரிடருக்கான தீர்வு மற்றும் விபத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றிய ஆய்வறைக்கைகளாக நடை பெற்றது. இரண்டாவது அமர்வு பேரிடரின் போது பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள மக்கள் பாதிப்பினை குறைப்பதற்காக அவர்களுக்கான பயிற்சி எப்படி அளிப்பது என்பது குறித்தும் மக்களையும் ஊழியர்களையும் எவ்வாறு தயார்நிலையில் வைத்திருப்பது என்பது பற்றி துறைசார்ந்த வல்லுனர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த அமர்வினை Mr.P.G.Dhar Chakrabarty Secretary of National Disaster Management Authority அவர்கள் வழிநடத்த Mr.Sudhirkumar Member of Central Administrative Tribunal ,Ms.Ritu jhingon General manager- Corporate Communication &CSR CAIRN India. Mr.Zubin Zaman National Humanitarian Manager OXFAM , Dr.A.Michael Stern Mission Disaster Relief Officer USAID ஆகியோர் கலந்து கொண்டனர்.






பேரிடர் மேலாண்மைக் குழு தொடர்பான செயற்பாட்டு விளக்கம் கொடுக்கும் Angeli Qwatra

பேரிடர் குறித்த கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் Mr.M.Shashidhar Reddy



கண்காட்சியில் பொருள் குறித்த விளக்கத்தைக் கேட்கும் ஸ்ரீதரன்


நிகழ்வில் OXFAM NHM Mr. ZUBIN ZAMAN உடன் கலந்துரையாடும் SKILLS INDIA வின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிறிதரன்

Sritharan Meet Founder of Philanthrope Dr.Angeli Qwatra 

Discussion with National Disaster Management Authority member Mr.T.Nanda Kumar

discussion with KVL Consultant Mr.B.S.Negi

Program Organizer CII 

அதன் பின்னர் பங்கேற்பாளர்களின் கருத்துரைகளுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.  




  

No comments:

Post a Comment