Thursday 13 December 2012

புவி வெப்பமடைதலின் விளைவுகள்- Effects of Climate Changes

சமீபத்தில் படித்த சுற்றுப் புறச் சூழலில் ஏற்படும் மாற்றம் தொடர்பான ஒரு ஆய்வுக்கட்டுரை சிறப்பான எடுத்துக்காட்டுகளுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றது.. உங்களின் பார்வைக்காக..

சுற்றுப்புற சூழலையும் மனிதனின் வாழ்க்கையையும் தட்ப வெட்ப நிலை மாற்றமும், புவி வெப்பமடைதலும் பாதிக்கின்றன.வெப்பநிலையை பதிவுசெய்யும் கருவிகள் கொண்டு தட்பவெட்ப நிலை மாற்றத்தை கணக்கீட்டு பெற்ற முடிவுகள், கடல் மட்டம் உயர்வதற்கும், வடதுருவத்தில் பனியளவு குறைவதற்கும் ஆதாரங்களாக உள்ளது. IPCC நான்காம் மதிப்பீடு அறிக்கை, "உலகளாவிய சராசரி வெப்பநிலை இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் உயர்வடைந்துள்ளது [பெரும்பாலான இடங்களில்] என்பதற்கு காரணம் மனிதனால் அதிக அளவில் பயன் படுத்தப்படும் பைங்குடில் வளிமங்களால் தான்." என்று தெரிவிக்கிறது. வருங்கால தட்ப வெட்ப நிலை மாற்றங்கள் பூமியை இன்னும் வெப்பமடைய செய்யும்(அதாவது, உலகளாவிய இடைப்பட்ட வெப்பநிலை மேல் போக்கில் சென்று கொண்டிருக்கிறது), கடல் மட்டத்தை உயர செய்யும், தீவிர தட்பவெட்பநிலையை உண்டாக்கும் நிகழ்வுகளை அடிக்கடி ஏற்பட செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தட்ப வெட்ப நிலை மாற்றத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது சூழல் மண்டலம். மனிதர்கள் வருங்கால தட்ப வெட்ப நிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள சிரமப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தடப் வெட்ப மாற்றங்களால் நடை பெறவிருக்கும் அபாயங்களை தடுக்க நிறைய நாடுகள், பைங்குடில் வளிமங்களை குறைக்க சட்டம் கொண்டு ஆதரிக்க பொது கொள்கைகள் கொண்டுள்ளன.
1079059662.jpg
மேலோட்டம்
கடந்த நூற்றாண்டில், உலக சராசரி தட்பவெட்ப நிலையில் அதாவது புவி வெப்பமடைதலில் மேல்நோக்கிய போக்கு இருப்பதாக தட்பவெட்ப நிலை கருவிகள் பதிவு செய்துள்ளன.ஆர்க்டிக் சுருங்குதல், ஆர்க்டிக் மீதேன் வெளியிடுதல்,நிரந்தரமான பனிக்கட்டி பகுதிகளிலிருந்து மண்ணுக்குரிய கார்பன்களை வெளியிடுதல் மற்றும் கடலோர வண்டல்களிலிருந்து வெளியாகும் ஆர்க்டிக் மீதேன், கடல் மட்டம் உயர்வு ஆகிய மாற்றங்கள் காணப்பட்டு வருகின்றன். இந்த நூற்றாண்டில் உலக சராசரி தட்ப வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை பொழிவதிலும் மற்ற தட்ப வெட்ப நிலைகளிலும் அதிக அளவு மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்நோக்கப்படுகிறது.உலக அளவிலிருந்து வட்டார அளவுக்கு நமது பார்வையை திருப்பும் போது அதில் நடக்கக்கூடிய தட்ப வெட்ப மாற்றங்களைப் பற்றி நம்மிடம் தெளிவான செய்திகள் இல்லை. தட்ப வெட்ப மாற்றத்தின் அளவையும் தீவிரத்தையும் பொறுத்தே பூமி வெப்பமடைய நேரிடுகிறது. இந்த தட்ப வெட்ப மாற்றங்களினால் சில மாற்றம் செய்ய முடியாத இயற்பியல் சார்ந்த விளைவுகள் ஏற்படுகின்றன. இருபத்தியோராம் நூற்றாண்டின் முடிவுக்கு முன்னாள் கடல் மட்ட உயரம், 18 இலிருந்து 59 cm ஆக உயரும் என்று நம்பப்படுகிறது.(7.1 - 23.2 இன்சஸ்) அறிவியலை ஆதாரமாக கொண்டு புரிந்து கொள்ளாததால் பனி தகடுகள் எவ்வாறு கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. வான் கோள வட்டத்தின் கவிழ் பரப்பின் மெரிடியனல் ஓவர்டர்னிங் சிற்குலேஷன் வேகம் இந்த நூற்றாண்டுக்குள் குறையும் என்று நம்பப்பட்டாலும், அட்லேண்டிக் மற்றும் ஐரோப்பாவில் தட்ப வெப்பம் பூமி வெப்பமடைவதால் அதிகமாகவே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 1-4 °C வெட்பத்தில் (1990-2000 ஆண்டு கணக்கில் பார்க்கும் போது) கிரீன்லாந்து பனி தகடு முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு ஒரு சில நூற்றாண்டுகளிலிருந்து ஒரு ஆயிரம் ஆண்டுக்குள் உருகக்கூடும்.இதனுடன் மேற்கு அண்டார்க்டிகா பனி தகடு லேசாக உருகிக்கொண்டு இருப்பதால் கடலின் மட்ட அளவு 4-6 மீ அல்லது அதற்கும் மேலாக உயரக்கூடும்.

தட்ப வெட்பத்தின் மாற்றத்தினால் மனிதனால் ஏற்படும் விளைவுகள் இது தான் என்று தெளிவர சுட்டிக்காட்ட முடிவதில்லை.சில பகுதிகளும் வட்டாரங்களும் இதனால் நன்மையை அடையும் ஒப்பது சில இடங்கள் தீமையை அதிக அளவில் சந்திக்கின்றன.வெப்பமடைதலின் அளவு அதிகமாகும் பட்சத்தில் (2-3 °C யை விட அதிகமாக இருக்கும் பொழுது, அதாவது 1990 அளவுகளை பொருத்து) இதனால் ஏற்படக்கூடிய நல்ல விளைவுகளை விட தீமைகள் தான் அதிகம் ஆகின்றன. கீழ் நில நடுக்கோடுகள் மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகள் இரண்டிலும் தட்ப வெட்ப நிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் அபாயகரமானவையாக இருக்கின்றன.மனிதனால் உருவாக்கப்பட்ட புதிய் அமைப்புகளால் இந்த தட்ப வெட்ப நிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு தன்னை அவனால் மாற்றி அமைத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் மாற்றி அமைத்துக் கொள்வதற்கான செலவை பற்றிய விவரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது மிகவும் அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. தட்ப வெட்ப நிலை மாற்றத்தினால் அநேக உயிரின வகைகள் அழிவது மட்டுமில்லாமல் சூழல் மண்டலங்களின் வேற்றுமைத்தன்மையும் குன்றுகிறது.உயிரியல் மற்றும் புவியியர்பியல் அமைப்புகளைக்கொண்டு மாற்றியமைப்பது மனித அமைப்புகளை விட சுலபமானவை.
Url.png

தீவிர வானிலை
தட்ப வெட்ப மாற்றங்களைப் பற்றிய வருங்கால போக்கைப்பற்றி IPCC அறிக்கை நிறைய குறிகளை சொல்லி உள்ளது. நிலபகுதிகளில் வெப்ப அலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் மேலும்,
* அதிக அளவில் நிலங்கள் வறட்சியை சந்திக்கும்
* வெப்பமண்டல புயல்கள் அதிக அளவில் உண்டாகும்.
* கடல் மட்டத்தின் அளவும் பல நிகழ்வுகளினால் அதிகரிக்கின்றது. (சுனாமியைபோல் அல்லாத நிகழ்வு)
தீவிர வானிலையை கொண்டு வரும் சூறாவளியின் ஆற்றல், சூறாவளி தீவிரத்தின் ஆற்றலை வீணாக்கும் குரிகாட்டியையும் அதிகரிக்கிறது. கெர்ரி இமானுவேல் சூறாவளி ஆற்றல் வீணாகுவதுக்கு வெப்பத்துடன் தொடர்பு உண்டு என்றும், புவி வெப்பமாகுவதுடனும் தொடர்பு உண்டு என்றும் எழுதி இருக்கிறார். தற்சமயம் நடக்கும் நிகழ்வுகளைக்கொண்டு கெர்ரியால் நடத்தப்பட்ட ஆய்வு, கடந்த சில ஆண்டுகளில் புவி வெப்பமடைதலுக்கும் ஆற்றல் வீணாகுவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று உறுதியாக கூறுகிறது. சூறாவளியை உருப்படிவமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளும் இதே முடிவுகளை தான் தந்தன. வெப்பம் அதிகமிருக்கும் நீரில் உருவாகும் சூறாவளிகள் ,அதிக அளவு CO2ஐ தங்களுள் அதிக அளவு தீவிரத்தன்மையை கொண்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாதிரியின் மூலம் சூறாவளிகள் அடிக்கடி வரும் ஆற்றலையும் இழக்கின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும், சூறாவளியின் அளவு, வகை 4 அல்லது 5-ஐ எட்டியுள்ளது. இதன் காற்று வேகம், மோடி ஒன்றுக்கு 56 மீட்டராக உள்ளது. 1970 களில் 20% மாக இருந்தது 1990 களில் 35% மாக உயர்ந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் US இல சூறாவளிகளால் உண்டாகும் குளுமை 7% மாக உயர்ந்துள்ளது. அட்லேண்டிக் மல்டி டிகேடல் ஆசிலேஷனை எதிர்த்து புவியின் வெப்பம் இதை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பது தெளிவாக புரியவில்லை. காற்று சாய்வளவில் அதாவது wind shearஇனால் கடல் மேற்பரப்பு வெப்பம் அதிகரித்தால், அதனால் சூறாவளியின் மீது சிறு பாதிப்பு இருக்கும் அல்லது பதிப்பே இல்லாமலும் போகும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹோயோஸ்மற்றும் குழுவினர் (2006), 1970-2004 கலீல் வகை 4 மற்றும் 5 சூறாவளிகள் அதிகரித்ததுக்கு காரணம் கடல் மேற்பரப்பு வெப்பம் தான் காரணம் என்று ஆதாரம் திரட்டியுள்ளனர்.

தீவிரமாகும் வானிலையினால் அதிக அபாயங்கள் நடக்க நேரிடுகிறது. இது மக்கள் தொகை அதிகமாகுவதினால் நடக்கிறது என்றும், தட்ப வெப்ப நிலை மாற்றத்தை விட சமுக மாற்றங்களால் தான் ஏற்படுகின்றது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. வேர்ல்ட் மீடியாராலாஜிகள் ஆர்கனைசேஷன், “வெப்பமண்டலங்களில் உண்டாகும் புயல் தட்ப வெப்பத்துக்கு மனிதனின் செயல்கள் காரணமாக இருக்கலாம் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை.”, என்று விளக்குகிறது.மேலும், “இதுவரை , ஒரு வெப்பமண்டல புயல் கூட தட்ப வெப்ப மாற்றத்தினால் உருவாக வில்லை”, என்றும் குறிப்பிடுகிறது.

T2M A1B 2030 2060 2085ano1961-1990 globe en.jpg

பனிப்பாறைகள் குறைந்து மறைந்து போகுதல்
வரலாற்றில் பின்னோக்கி பார்க்கும் போது அதாவது 1550 இலிருந்து 1850 வரையான ஆண்டுக்காலத்தில் மிகவும் குளுமையான சமயத்தில் பனிப்பாறைகள் உருவாகின. இந்த சமயத்தை குறுகிய பனிக்காலம் என்று அழைக்கலாம். 1940 ஆம் ஆண்டு வரை உலகமெங்கும் இருந்த பனிப்பாறைகள் தட்ப வெப்பம் அதிகரிக்கும் போது குறையத் தொடங்கின.உலகம் எங்கும் லேசாக 1950 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை குளிரத் தொடங்கியதால் க்லேஸியர் ரிட்ரீட் பல நிகழ்வுகளில் குறையத்தொடங்கி இருந்தது.1980 ஆம் ஆண்டு முதல் பனிப்பாறைகள் குறைவு மிகவும் விரைவாக நடக்கத் துவங்கியுள்ளது. இதனால் உலகிலுள்ள பல பெரும் பனிப்பாறைகளின் இருப்பு அச்சுறுத்தப்பட்டுள்ளன.1995 ஆம் ஆண்டு முதல் இந்த செய்முறை அதிவேகமாக நடை பெற்று வருகின்றது
.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதிகளிலுள்ள பனித்தொப்பிகள் மற்றும் பனித்தகடுகளை விட்டுவிட்டு, உலகமெங்கும் மீதியுள்ள பனிப்பாறைகள் 19 ஆம் நூற்றாண்டு முதல் 50% குறைந்துள்ளது. தற்சமயம் பனிப்பாறைகளின் குறைவு அன்டேஸ், அல்ப்ஸ், பைரிநீஸ், இமாலயம், ராக்கி மலைகள் மற்றும் மேற்கு கேச்கேடுகளில் அதிக அளவில் இருக்கின்றன.

இந்த பனிப்பாறைகள் தொலைவதினால் நிலச்சரிவுகள் உண்டாகின்றன, வெள்ளங்கள் உண்டாகின்றன, மலைமேல் இருக்கும் பனி ஏரிகள் நிரம்பி வழிகின்றன, ஆண்டு போன்ருக்கு நதியின் நீரோட்டமும் மாற்றமடைகிறது.பனிப் பாறைகளிலிருந்து வெளிவரும் தண்ணீரின் அளவு கோடைக்காலத்தில் பனிப்பாறைகளின் அளவிப்போலவே குறைந்து வருகின்றன. இது உலகம் முழுவதிலும் பலப் பகுதிகளில் காணப்பட்டு வருகின்றது. பனிப்பாறைகள் மீது சேகரிக்கப்படும் பனி மூடுதலினால் பனி உருகுவதில்ல்லை. இதனால், அதிகமாக குளிர் இருக்கும் ஆண்டுகளில் மலைகளில் இருக்கும் பனிப்பாறைகள் தனக்குள்ளேயே தண்ணீரை வைத்துக் கொள்கின்றன. வெப்பம் அதிகமாகவும் காய்ந்தும் இருக்கும் ஆண்டுகளில், பனியில் இருந்து உருகி வரும் நீரின் அளவு அதிகமாகிறது. அந்த இடத்தில் இருக்கும் குளிர் அளவும் குறைந்தே இருக்கிறது.

மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய ப்பகுதிகளில் ஓடும் முக்கிய நதிகள் காய்ந்து இருக்கும் காலக்கட்டத்தில் ஹிந்து குஷ் மற்றும் இமாலய பனிப்பாறைகளில் இருந்து உருகி வருகின்றன.அதிக அளவில் உருகுகின்ற பனி பல ஆண்டு காலத்திற்கு நேரோட்டத்தை தருகிறது. பிறகு, "பூமியில், மக்கள் தொகை அதிகமிருக்கும் இடங்களில் தண்ணீர் பற்றாகுறை ஏற்படுகின்றது." இது மூலமாக இருக்கும் பனிப்பாறைகள் மறைவதினால் ஏற்படுகின்றது. திபெத்திய மெட்டு நிலம் பணியை சேமித்து வைத்துக்கொள்வதில் உலகிலேயே மூன்றாவது இடத்தை பிடித்து உள்ளது. இங்கு உள்ள வெப்பங்கள் மீதியுள்ள சீனாவை விட நான்கு மடங்கு அதிகமாக விரைந்து ஏறி வருகின்றது.பனிப்பாறைகளும் இங்கு உலகில் எங்கும் இல்லாத் அளவுக்கு அதிக அளவில் குறையத் தொடங்கி உள்ளன.

Temperature.gif
கங்கை, இந்து நதி, பிரமபுத்திரா, யாங்க்சீ, மீகாங், சல்வீன் மற்றும் எல்லோ போன்ற ஆசியாவின் மிகப்பெரிய ஆறுகளின் மூலமாக இருக்கின்றது இமாலய பனிப்பாறைகள். இவை வெப்ப அதிகரிப்பினால் 2035 ஆம் ஆண்டுக்குள் மறைந்து போகும் என்று நம்பப்படுகிறது.ஏறத்தாழ 2.4 பில்லியன் மக்கள் இமாலய நதிகளின் வடி நிலத்தில்வாழ்ந்து வருகின்றனர். வரும் ஆண்டுகளில் இந்தியா, சீனா, வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மியான்மரில் வெள்ளப்பெருக்கேடுப்பும் வறட்சியும் மாறி மாறி வரும் என்று சொல்லப்படுகிறது.இந்தியாவில் மட்டும் கங்கை 500 மில்லியன் மக்களுக்கு குடிக்க மற்றும் வேளாண்மை செய்ய தண்ணீர் அளிக்கிறது. பருவ காலங்களுக்கு ஏற்றவாறு பனி உருகும் போது அதிலிருந்து பெறுகின்ற அதிக நீரினால் மேற்கிந்தியாவுக்கு அதிக வாளாண்மை உற்பத்தி கிட்டியது.

வட மேற்கு அமெரிக்கா, பிரான்ஸ் ஜோசப் லேண்ட், ஆசியா, ஆளப் மலைகள், பைரிநீஸ், இண்டநேசியா, ஆபிரிக்கா, தென் அமேரிக்காவில் லேசாக வப்பமடையும் பகுதிகள் மற்றும் வெப்பமாகும் மண்டலங்களில் இருக்கும் பனிப்பாறைகள் உருகுவதினால் 19 ஆம் நூற்றாண்டு முதல் உலகமெங்கும் வெப்ப அளவு அதிகரித்து உள்ளது.இந்த மலைப் பனிப்பாறைகள் உருகுவதினால் வருங்காலத்தில் நீரின் மூலங்களுக்கு என்ன செய்வோம் என்ற கவலை எழுந்துள்ளது.வட மேற்கு அமெரிக்காவில் உள்ள 47 மேற்கு கேஸ்கேடு பனிப்பாறைகள் மறைந்துவருவதாக கண்காணிப்பு சொல்கிறது.

http://164.100.72.205/care/wiki/index.php

Hand Washing Awareness - கை கழுவுதல் விழிப்புணர்வு...

சத்திய மங்கலம் மலைகிராம பள்ளிகளில் ஸ்கில்ஸ் இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்திட்டப் பணியில் மாணவர்களின் கல்வி, விளையாட்டு, உடல்நலம் மற்றும் சுகாதார செயற்பாடுகளை ஊக்குவிக்கும் செய்ல்முறைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஸ்கில்ஸ் இந்தியா பணியாற்றும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அளிக்கப் பட்டது.

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கைகளின் செயற்பாடுகள் ஒவ்வொன்றினாலும் கைகளில் கிருமிகள் எப்படி இலகுவாக தொற்றிக் கொள்கின்றது என்றும் அதனால் நமது உடல் நலனில் ஏற்படும் பாதிப்புக்கள். கிருமிகள் நம் வயிற்றுக்குள் சென்று வயிற்றோட்டம் மற்றும் பிற நோய் தாக்கங்களை உருவாக்குகின்றது என்பதை உடன் வந்த மருத்துவ பணியாளர்கள் விளக்கினர், பின்னர் மாணவர்களுக்கு கைகளை எப்படிக் கழுவுவது என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ளும் படியாக மாணவர்கள் அனைவரும் வரிசையில் நிற்கவைத்து அவர்களுக்கு செயன்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது. 



மாணவர்கள் தங்களது கைகளை பயிற்சியாளர் சொவதற்கேற்ப கழுவுகின்றனர்..

சுத்தமான கைகளின் அழகை ரசிக்கும் சிறுமி.



மாணவர்கள் பயிற்சியாளர் செய்வதைப் போன்று தாமும் செய்து கைகளைச் சுத்தமாக்கினர். இதே போல் சாப்பாட்டிற்கு முன்பாகவும் பின்பாகவும், மலசலங்கள் கழித்ததன் பிறகும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும்  உணவு பண்டங்கள் ஏதேனும் சாப்பிடும் போது கைகள் சுத்தமாக இருக்கின்றதா என்பதை கவணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதை ஓவொரு நாளும் வீட்டிலும் பள்ளியிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பள்ளி ஆசிரியர்களிடம் கூறப்பட்டது. 

Friday 30 November 2012

வரைபடக் கல்வி- கடலூரில் பள்ளிகளில் ஸ்கில்ஸ் இந்தியாவின் பணி-India Map and Science pictures drawn in Schools ,School development project,Cuddalore District

கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பின் தங்கிய மீனவ கிராமங்களிலும் கடலோர குடியேற்றக் கிராமங்களிலும் ஸ்கில்ஸ் இந்தியா தனது பள்ளிகளுக்கான செயற்திட்டப் பணிகளைச் செய்து வருகின்றது இந்த பகுதிகளில் உள்ள 20 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் கல்வியினையும் அவர்களது ஏனைய திறன்களை வளர்க்கின்ற செயல்களையும் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. 

கடந்த மாதம் அங்குள்ள பள்ளிகளில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான ஒரு பணியாக பள்ளிகளின் சுவர்களில் தேசவரைபடம் மற்றும் மாணவர்களின் மனதில் இலகுவாக சென்று சேரும் வகையில் அறிவியல் சார்ந்த படங்களை வரைவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் பெயரில் பள்ளியின் தலைமை ஆசிரியர்களின் அனுமதி பெற்று மாணவர்கள் அதிகமாக பார்வையிடக் கூடிய இடங்கள் தெரிவு செய்யப்பட்டு அங்கு அவர்களுக்கு தேவையான படங்கள் வரையப் பட்டன இருபது பள்ளிகளிலும் இந்த பணி நடைபெற்று வருகின்றது.






இந்த வரைபடங்கள் தமக்கு இலகுவாக ஞாபகத்தில் வரும் வகையில் இருப்பதாகவும் பள்ளி நேரம் முடிந்த பின்பு விளையாடும் போதும், பள்ளிக்கு வரும் போதும் போகும் போதும் பார்த்து பார்த்து தமக்கு மனதில் இலகுவாக பதிந்து விட்டதாக கூறுகின்றனர். இந்த பணியினை பள்ளிகளில் செய்து தந்தமைக்கு ஸ்கில்ஸ் இந்தியா ( Skills India ) விற்கு நன்றியினைக் கூறுவதாக பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கூறினர்.


திரையுலக பிரபலங்கள் கையெழுத்திட்ட பெண்குழந்தையின் கல்விக்கான கையெழுத்து இயக்கம்-South India Celebrities signed their support to Skills India's Vision and Mission towards education of Girl child education

கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் தமிழ்நாட்டின் நான்கு பெரும் மாநகரங்களில் ஸ்கில்ஸ் இந்தியாவினால் நடத்தப்பட்ட பெண்குழந்தைகளின் கல்விக்கான உரிமை கையெழுத்து இயக்கத்தில் தமிழ்நாட்டின் திரையுலக பிரபலங்கள் பலர் கையெழுத்து இட்டு இந்த இயக்கம் தனது பணியில் வெற்றி பெற  வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.













               


                


செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு கையெழுத்திடுகிறார்

  
        

Thursday 29 November 2012

பெண் குழந்தைகளின் கல்வியின் அவசியம் குறித்த கையெழுத்து இயக்கம்-Campaign for Promotion of Girl Child Education-Skills India


கற்கும் பாரதம், அனைவருக்கும் கல்வி என்று எத்தனை திட்டங்களை அரசுகள் கொண்டுவந்த போதிலும் இன்னும் பல கிராமங்களிலும் நகரின் சேரிபுற பகுதிகளிலும் மாணவர்களின் கல்வி அளவினை பெரிதாக ஒன்றும் அதிகரிப்புச் செய்ய முடியவில்லை அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி அவர்களின் பால்ய வயதிலே பாழ் பட்டுப் போவது கொடுமையான பாலினப் பாகுபாடாய் இன்னும் பல கிராமங்களிலும் நகரப்புறங்களிலும் காணத்தான் செய்கின்றன.

இந்த பாலினப் பாகுபாட்டில் இருந்து விடுபடமுடியாமல் பல சமுதாயத்தில் வாழும் பெண்களும் தமது ஆரம்ப கல்வியுடனோ அல்லது அதுவும் இல்லாமலோ.. இடுப்பில் குழந்தையினைத் தூக்கிக் கொண்டு வீடுகளில் உட்கார்ந்து குழந்தைகளை பராமரிக்கும் பணியாளாகிவிடும் இந்த அவலங்கள் இன்னும் குறைந்தபாடில்லை.

கல்வி எல்லோருக்கும் பொதுவானது குழந்தைகளில் ஆண் பெண் பாகுபாட்டை நீக்குதல் பெண்கல்வி உரிமையை உறுதி செய்தல் பெண்குழந்தைகள் மீதான அடக்குமுறைகளை ஒழிக்க வேண்டும் என்றும் இவற்றை எல்லோருக்கும் தெரியும் விதமாகவும் அந்த எண்ணங்களை அவர்களின் மனதில் விதைக்கும் வகையிலும், இந்த கையெழுத்துக்கள் மூலம் பெண்குழந்தைகளின் கல்விக்காய் சிறப்பு திட்டம் ஒன்றினை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவரவேண்டும் என்றும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கையெழுத்து பிரகடனம் ஒன்றை ஸ்கில்ஸ் இந்தியா (Skills India) ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை, மதுரை,திருச்சி, கோவை என நான்கு மாநகரங்களின் பல்வேறு இடங்களில் ஸ்கில்ஸ் இந்தியாவின் தன்னார்வ தொண்டர்கள் கையெழுத்து பிரகடனத்தினை நடத்தி அங்குள்ள ஒவ்வொருவருக்கும் விளக்கம் அளித்தனர். இந்த நான்கு நகரங்களில் சந்தித்து கையெழுத்து பெற்ற மக்களின் எண்னிக்கை 20132 ஐ எட்டி சாதித்தனர். இருபதாயிரம் மக்களுக்கு மேலாக சந்தித்து விளக்கம் கொடுத்து மக்களின் சாதாரண மக்களின் மத்தியில் பெண்குழந்தைகளின் கல்வியின் அவசியம் பற்றிய விளக்கங்களை அளித்த தன்னார்வ தொண்டர்களுக்கும் அவர்களிடம் நின்று விளக்கத்தினைப் பெற்றுச் சென்ற அத்தனை பேரும் போற்றத்தக்கவர்கள்…….


மதுரை மாநகரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம்

மதுரையின் மையப்பகுதிகளான பெரியார் பேரூந்து நிலையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதி, தல்லாக்குளம், காந்திமியூசியம்,கோரிப்பாளயம் போன்ற நகரின் மக்கள் கூடும் முக்கியமான பகுதிகளில் ஸ்கில்ஸ் இந்தியாவின் தன்னார்வலர்கள் முகமது அஸ்லம்,M.K.மகேஸ்வரி போன்றோர் 4548 கையொப்பங்களை மக்களிடம் இருந்து பெற்றிருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரிடமும் விழிப்புணர்வு அளித்திருக்கின்றனர்.







சென்னை மாநகரத்தில் நடைபெற்ற கையெழுத்துப் பேரியக்கம்

சென்னையின் மாநகரின் முக்கிய பகுதிகளான அண்ணாநகர், கோயம்பேடு பேரூந்து நிலையம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், சைதை துரைசாமி IAS பயிற்சி மையம் போன்ற பகுதிகளிலும் மேலும் நகரின் மக்கள் கூடும் பெரும் பகுதிகளிலும் 5885 கையெழுத்துக்கள் மக்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டு பெறப்பட்டு இருக்கின்றன இந்த பணியினை ஸ்கில்ஸ் இந்தியாவின் தன்னார்வ பணியாளர்கள் திரு.மகேஸ்கார்த்திக் , திரு. ரமேஸ், கெளரீஸ்வரன் போன்றோர் ஈடுபட்டிருந்தனர். 





  


கோவை மாநகரின் கையெழுத்து பேரியக்கம்

கோயம்புத்தூரின் பிரதான சாலைகளிலும், காந்திபுரம் நகர பேரூந்து நிலையம் ,மற்றும் புறநகர பேரூந்து நிலையம், விமானநிலையம், புரூக்பில்ட்ஸ், மற்றும் GRD கலைக் கல்லூரி, PSG கலைக் கல்லூரி, மற்றும் பிரதான மால்கள் அமைந்திருக்கும் பகுதிகள், R.S புரம் என பல பகுதிகளில் திரு.நா.சிறிதரன் மற்றும் R.பிரதாப் ஆகிய தன்னார்வ தொண்டர்கள் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் 6524 கையெழுத்துக்களை மாநகர மக்களிடம் இருந்து விளக்கம் அளித்துப் பெற்றிருந்தனர்.












திருச்சிராப்பள்ளி மாநகரில் இடம் பெற்ற கையெழுத்து பேரியக்கம்
திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் மையப்பகுதிகள், ரயில்நிலையம், மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், பேரூந்துநிலையம், சென் ஜோசப் கல்லூரி,மற்றும் மாநகரில் மக்கள் அதிகமாக கூடும் சந்தைப் பகுதிகள் என பல்வேறு பகுதிகளிலும், கல்வி நிலையங்களிலும் ஸ்கில்ஸ் இந்தியாவின் தன்னார்வ தொண்டர்கள் திரு.சதீஸ், திரு. ராஜா ஆகியோர் அவர்களது நண்பர்களுடன் இந்த கையெழுத்து பணியிணை மேற்கொண்டு நடத்தினர் 

                                                  




மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமைதனை ஒழிப்போம் என்ற பாரதியின் வாக்கினை மனதில் கொள்வோம்… ஒரு பெண்னை கல்வி கற்க வைப்பதன் மூலம் நம் சந்ததியினையே கல்வி கற்ற சந்ததியாக மாற்ற முடியும்….