Sunday 16 September 2012

National Children's Science Congress-2012-தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு -2012 க்கான ஈரோடு மாவட்ட அளவிலான 3ம் கட்டக் கலந்தாய்வு.



 மாநில தலைவர் முனைவர். என். மணி
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக ஈரோடு மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2012 க்கான 3ம் கட்டக் கலந்தாய்வானது சத்தியமங்கலம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும்.பல்கலைக்கழக பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சிறந்த கல்வியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர்களை உறுப்பினர்களாகவும் தன்னார்வ தொண்டர்களாகவும் கொண்டு இயங்கி வருகின்றது. இந்திய அரசின் NCSTC இல் உறுப்பினராகவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு என்ற குழந்தைகளுக்கான ஓர் அறிவியல் ஆய்வு நிகழ்வு, 1973 ம் ஆண்டிலிருந்து கடந்த 19 ஆண்டுகள் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றது, இந்திய அரசின் தொழில்நுட்ப துறையும் , தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழுமமும், மற்றும் Rashtriya Vigyan Evan Prodyogiki Sanchar Parishad  ஆகியன இணைந்து நடத்துகின்றன. மாநிலங்களின் அறிவியல் தொழில் நுட்பக்கழகம், தன்னார்வ இயக்கங்கள் இதில் பங்கேற்று இதனை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றன.
மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்.
 சோ. மோகனா
அந்த வகையில் 2012 ம் ஆண்டுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குழந்தைகளைப்  பங்கு கொள்ளச் செய்வதற்காக தன்னார்வ தொண்டர்களுடனான சந்திப்பினை  தன்னார்வ நிறுவனத்துடன் சேர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 15.09.2012 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் சத்திய மங்கலம் மலைப் பகுதி கிராமங்களிலும் அங்குள்ள பள்ளிகளிலும் பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான READ NGO, Aide et Action NGO, SKILLS INDIA, SUDAR NGO, ஆகிய நிறுவனங்களின் தன்னார்வ தொண்டர்கள் 34 பேர் கலந்து கொண்டார்கள்

மாவட்ட மட்டத்தில் 3ம் கட்டமாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர். சோ. மோகனா, மாநில தலைவர் முனைவர். என். மணி ஆகியோரும் ஈரோடு மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஒருங்கினைப்பாளர் திருமதி. P.ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்தாய்வினை எயிட் எட் ஆக்சன் நிறுவனத்தின் திரு. முரளி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

ஈரோடு மாவட்ட  தலைவர்  திரு  உமாசாங்கர்
பின்னர் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். சோ. மோகனா அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் அதில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் அமைப்புக்கள் பற்றியும் விளக்கம் அளித்தார், இந்த அறிவியல் இயக்கத்தின் சார்பாக வருடா வருடம் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றியும் அதன் மூலம் குழந்தைகளுக்கு கிடைக்கின்ற பெருமைகள், பாராட்டுக்கள் மற்றும் குழந்தைகள் அடையும் பயன்களைப் பற்றி பேசினார்.

மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பாளர்
 திருமதி. P. ரேவதி
அதன் போது குழந்தைகள் அறிவுசார் திறனை வளர்க்கும் இந்த ஆய்வு செயற்பாடானது மாணவர்களை தேசிய அளவில் ஒரு பாராட்டினையும், அவர்களின் வாழ்க்கையினை மாற்றும் ஒரு செயற்பாடாகவும் அமையும் இதில் 10 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள் இதில் பங்கேற்கலாம். பங்கேற்பதற்கான ஒரே தகுதி வயது மட்டும்தான், பள்ளிக் குழந்தைகள், பள்ளி சாராக் குழந்தைகளும், இரவுப் பள்ளியில் படிப்பவர்களும், படிப்பை இடைவிட்ட குழந்தைகள் கூட பங்கேற்கலாம். இந்த ஆய்வு செயற்பாட்டில் பங்கு கொள்ளும் குழந்தைகள் அறிவியல் தொழில்நுட்பக் குழுமத்தால் அறிவித்த மைய்யப் பொருள் பற்றி சுமார் மூன்று மாதகாலம் குழுவாக ஆய்வு செய்யவேண்டும். குழுவின் எண்னிக்கை 2-5 பேர் மட்டுமே. குழந்தைகள் குழு ஆய்வினை சுமார் 3 மாதம் ஒரு வழிகாட்டி ஆசிரியரின் துணையுடன் செய்ய வேண்டும்.

நா. ஸ்ரீதரன்,SKILLS INDIAதன்னார்வ  கலந்தாய்வு   

இந்த ஆய்வுகள் எப்போதும் அவர்கள் வாழ்கின்ற உள்ளூர் பகுதி பற்றியதாகவோ அல்லது அந்த பகுதி சார்ந்த பிரச்சனையாகவோ இருக்க வேண்டும். இங்கிருக்கும் ஒருவர் மற்ற மாவட்டம் பற்றி ஆய்வு செய்யக் கூடாது என்றும் ஆய்வின் தலப்புக்கள் தன்னிலை விளக்கமுடையதாய் அமைய வேண்டும் என்றும் இந்த ஆய்வானது உயிர் ஆபத்து உடையதாகவோ, ஆபத்து விளைவிக்கும் பொருட்கள் தொடர்பானதாகவோ அல்லது மனிதன் உணவு, பாணம் தொடர்பானதாக இருத்தல் கூடாது என்று கூறினார். இந்த ஆண்டுக்கான ஆய்வின் தலைப்பாக ஆற்றல் என்னும் தலைப்பு வழங்கப் பட்டிருக்கின்றது இதன் கீழ் 6 வகையான உபதலைப்புக்கள் வழங்கப் பட்டுள்ளன இவை ஒவ்வொன்று தொடர்பாக ஒவ்வொரு மாணவரும் ஆய்வினை மேற்கொள்ளலாம் என்று கூறினார். இந்த ஆய்வு செயற்பாடுகளானது பொதுவாக தனியார் பள்ளிகளையும் நகரங்களில் உள்ள அரசு பள்ளிகளையும் சென்று அடைந்திருக்கின்றது ஆனால் மலைப் பிரதேசங்களில் உள்ள குழந்தைகளை இது முழுமையாக சென்றடையவில்லை என்பதனாலையே இந்த கலந்தாய்வினை இன்று ஏற்பாடு செய்திருக்கின்றோம் மலைக் கிராமங்களில் பணிபுரியும் நீங்கள் இவர்களை ஊக்கப் படுத்துவதன் மூலம் இந்த ஆய்வில் அங்குள்ள குழந்தைகளையும் பங்குபெறச் செய்யலாம் என்று கூறி முடித்தார்.

அதன் பின்னர் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர். என். மணி அவர்கள் எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் பல்வேறு அரசு துறைப் பணியாளர்களும் , பேராசிரியர்கள் விஞ்ஞானிகளும் தன்னார்வலர்களாக இருக்கின்றனர், உண்மையில் இந்த வாய்ப்பானது ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைத்த பெரிய களமாகும் பேராசிரியர். சோ. மோகனா போன்றோர் இந்த குழந்தைகள் ஆய்வு நடவடிக்கைக்காக அயராது பாடுபடுகின்றனர், எம்முடன் இந்த மாவட்டத்தின் அறிவியல் மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பாளர் திருமதி P.ரேவதி அவர்களும் வருகை தந்திருக்கின்றார் முதல் இரண்டு கட்டங்களாக ஈரோடு மாவட்ட மட்டத்தில் கலந்தாய்வு நடைபெற்றது பல்வேறு பள்ளிகளிலும் அமைப்புகளிலும் இருந்து பலர் கலந்து கொண்டனர் அதன் பின்னர் மலைக்கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளின் கைகளிலும் இது சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் எயிட் எட் ஆக்சனின் திரு, முரளி அவர்கள் ஏற்பாட்டின் பேரில் இங்கு 3வது கட்டமான கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. இதனை நீங்கள் குழந்தைகள் இடத்தில் சொல்வதற்கு அதிகம் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டு என்ற அவசியமில்லை ஒரு அளவான படிப்பு இருந்தாலே போதுமானது என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பாளர் திருமதி. P. ரேவதி அவர்கள் இந்த ஆய்வு தலைப்பானது 2 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றமடையும் அந்த வகையில் இந்த ஆண்டின் தலைப்பாக ஆற்றல் என்னும் தலைப்புக் கொடுக்கப் பட்டுள்ளது எனவும் அதன் கீழ் உள்ள ஒவ்வொரு உபதலைப்பிலும் ஆய்வினை மேற்கொள்ளலாம் என்று கூறினார், அத்தோடு இதற்கான விண்ணப்பங்களை வரும் ஒரு வாரத்தினுள் முடித்து ஆய்வினைப் பற்றிய தகவலை தர வேண்டும் என்று குறிப்பிட்டார் இந்த ஆய்வு தொடர்பான கையேடு ஒன்று உள்ளது அதனை எல்லோரும் பெற்றுக்கொண்டு அதனைப் பற்றிய விளக்கத்தினை பள்ளிகளில் ஆசிரியர்களிடமும் குழந்தைகளிடமும் தெரிவியுங்கள் எனக் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் பேராசிரியர்- மோகனா அவர்கள் ஆய்வறிக்கையின் வடிவம் பற்றியும் அதனை எளிமையாக வடிவமைக்கும் முறை பற்றியும் ஆய்வு தலைபுகள் ஒவ்வொன்றினதின் கீழ் வரும் வினாக்கள் எப்படியானதாக இருக்கவேண்டும் என்பது பற்றிய பங்கேற்பாளர்களின் கேள்வ்களுக்கு விளக்கமளித்தார் அதன் பின்னர் வந்திருந்த அனைவருக்கும் கையேடுகளையும் விண்ணப்பம் செய்வதற்கான படிவங்களியும் ஆசிரியர் P.ரேவதி அவ்ர்கள் வழங்கினார் அதைல் உள்ள சந்தேகங்கள் குறித்து தெரிந்து கொள்ள 6 குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் ஓவ்வொரு தலைப்பினை படித்து விட்டு அதில் புரியாததைப் பற்றி கேட்கும் படி கூறினார். கொடுக்கப்பட்ட 30 நிமிட நேரத்தில் வாசித்து முடித்த பங்கேற்பாளர்கள் அதில் புரியாத விடையங்களைக் கேட்டு அறிந்தனர் அது தொடர்பாக பேராசிரியர் மோகனா அவர்களும் அறிவியல் தாத்தா என்று அழைக்கப்படும் திரு.உமாசாங்கர் அவர்களும் விடையளித்தனர். பின்னர் கலந்து கொண்ட ஒவ்வொரு தொண்டு நிறுவன அமைப்பும் இந்த ஆய்வறிக்கையினை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

        

Friday 14 September 2012

TREE PLANTATION -SKILLS INDIA முடசல் ஓடை ஊரட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் விழா:

முடசல் ஓடை கருவாடு ஏலமிடும் தளம்

கிள்ளையில் இருந்து பரங்கிப்பேட்டை செல்லும் வழியில் அமைந்துள்ள கடற்கரையோரக் கிராமம் தான் முடசலோடை சுமார் 200 குடும்பங்களைக் கொண்டுள்ள இந்த ஊர் கருவாட்டு தொழிலுக்கு மிகவும் பெயர் போனது நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உட்பட்ட மாவட்டங்களில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீவணமாக கருவாடுகள் இங்கிருந்துதான் லாறிகள் பலவற்றில் கொண்டு செல்லப் படுகின்றன.

முடசல் ஓடைப் பள்ளி முகவாயில்
இந்த ஊரில் சுனாமிக்கு பின்னரான அரசினதும் தனியார் தொண்டு அமைப்புகளினதும் வீட்டுத்திட்ட பணிகளுக்கு பின்னால் எல்லோரும் குடியிருப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். இதனால் எல்லோருக்கும் தேவையான வீட்டு வசதி என்பது இவர்களுக்கு குறைவில்லாத நிலையிலே இருக்கின்றது. இந்த ஊரில் உள்ள உயர் நிலைப் பள்ளியில் இந்த ஊரைச் சேர்ந்த சுமார் 110 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த மாதம் வருகை தந்த SKILLS INDIA வின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தேவன் அவர்கள் குழந்தைகள் பாராளுமன்றம் என்ற அமைப்பினை தலைமை ஆசிரியர் திரு. சிவகுமார் அவர்களது முன்னிலையிலும் திரு. ஜெயராஜ் அவர்களைப் பொறுப்பாக அமைத்து ஆரம்பித்து வைத்தார்.

மரங்கள் நடுவதற்கான இடத்தினை
 தயார் செய்யும் மாணவர்கள்
இந்த நிலையில் அவர்களது பள்ளி வளாகத்தில் பசுமை மற்றும் சுற்றுச் சூழல் அமைப்பினர் மரக் கன்றுகள் நடவேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் அவர்கள் பள்ளியில் மரக் கன்றுகள் நடுவதற்காக அருள்தேவன் மற்றும் ஒருங்கினைப்பாளர் ஸ்ரீதரன் ஆகியோர் சென்று இருந்தனர். தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில் பொறுப்பாசிரியர் திரு. ஜெயராஜ் அவர்கள் ஆரம்பித்து வைக்க குழந்தைகள் பாராளுமன்றத்தின் பசுமை மற்றும் சுற்றுச் சூழல் துறையின் அமைச்சர் செல்வன்.திவாகர் தலைமையிலான நிவேதா, அருள்நாதன், பவித்ரா, மாதவன் ஆகியோரும் அவர்களுக்கு துணையாக விளையாட்டுத் துறையின் அமைச்சர் யுவராஜ், மற்றும் அவரது உறுப்பினர்கள் ரவிதரன், கமலி நிவேதா குணால் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

மாணவிகள் மரக்கன்றுகளுடன்
 காலை.10.30 மணியளவில் மரக் கண்றுகளை நடுவதற்கான பணி ஆரம்பமானது. முதலில் மரக் கன்றினை நட வேண்டிய இடங்களை ஆசிரியரும் மாணவர்களும் தேர்வு செய்தனர். பின்னர் மரக் கன்று நடத் தேவையான உபகரனங்களை மாணவர்கள் அருகில் இருக்கும் வீடுகளில் இருந்து பெற்று வந்தனர். மாணவிகள் மரக்கன்றுகள் நடும் இடத்திற்கு தேவையான இயற்கை உரங்களான காய்ந்த மாட்டெரு, இலை குளைகள் மற்றும் இரபதமுடையா நல்ல மண்களை கொண்டுவந்து சேர்த்தனர்.

பாதுகாப்பு வேலி அமைக்கும்
 பணியில் மாணவர்கள்
5 இடங்களில் மரக் கன்றுகள் நடுவதற்கான இடம் தெரிவு செய்யப் பட்டு அதனை தயார் படுத்தும் செயலில் மாணவர்களும் ஒருங்கிணைப்பாளர் அருள்தேவன் ஆகியோர் ஈடுபட்டனர், மற்றும் சில மாணவர்களும் ஒருங்கினைப்பாளர் ஸ்ரீதரனும் அந்த மரக் கன்றுகளுக்கான பாதுகாப்பு வேலியினை அடைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். சுமார் 11.30 மணியளவில் எல்லா இடமும் தயாரானது அதன் பின்னர் மதிய உணவின் பின்னர் மாலை வேலையில் மரக் கன்றினை நடலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு மானவர்கள் வகுப்பிற்கு சென்றுவிட ஆசிரியர் திரு. ஜெயராஜ் அவர்களும் மற்றும் பள்ளியின் உதவி பொறுப்பாசிரியரும் எம்மோடு பேசிய போது நாங்கள் நிறுவனத்தின் மூலம் செய்துவரும் இந்த பசுமை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு  தொடர்பான செயற்பாடுகளை குறிப்பிட்டோம்.

மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
அப்போது அவர்கள் சார் கடந்த சுனாமிக்கு பின்னர் இந்த பகுதியில் பெரும்பாலான அடிகுழாய் நீர்கள் உப்புநீராகி விட்டது ஆனால் எங்கள் பள்ளியின் அடிகுழாய் நீர் நல்ல தண்ணிராகவே இருக்கின்றது அதனால் நீங்கள் சொல்வது போன்று மாணவர்களுக்கு சமையல் தோட்டம் அமைத்துக் கொடுக்க கூடிய வசதி உள்ளது இது பற்றி உங்களுக்கு உதவிகள் தேவையென்றால் எங்கள் பள்ளியின் பெற்றோர் குழு தலைவர் திரு. கப்பலோட்டிய தமிழன் அவர்களைச் சென்று பாருங்கள் எனக் கூறினார். மதிய உணவின் பின்னரான சந்திப்பாக திரு. கப்பலோட்டிய தமிழன் அவர்களைச் சந்தித்து நம் நிறுவனத்தினைப் பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் அவரிடம் எடுத்துக் கூறிய போது மிகவும் சந்தோசமடந்தார் எங்கள் பள்ளியில் உங்கள் செயற்பாடு தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த தோட்டம் அமைப்பதற்கு உங்களுக்கு என்னிடம் இருந்து எவ்வாறான உதவி தேவை படுகின்றது எனக் கேட்டார்.

பாதுகாப்பு வேலி அமைத்தல்
இந்த தோட்டத்துக்கு தேவையான பாதுகாப்பு வேலிக்கு உங்களிடம் வலைகள் ஏதும் இருந்தால் கேட்கலாம் என்று இருந்தோம் எனக் கேட்டோம். அடுத்த நிமிடம் சரி என உறுதியளித்த அவர் அதனை அடைக்க தேவையான கம்புகளையும் தான் வாங்கி தருவதாக கூறினார். நாளைக் காலையில் இவை எல்லாம் பள்ளியில் இருக்கும் எனக் கூறினார்.

ஆசிரியர்கள் முன்னிலையில் மரங்கள் நடப்பட்டன

அவரிடம் இருந்து விடைபெற்று அன்று பிற்பகலில் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் எல்லோருமாக அந்த மரங்களை வைத்து பாதுகாப்பு வேலி அமைக்கப் பட்டது. அதன் பின்னர் நாளை இங்கு சமையல் தோட்டம் அமைப்பதற்கு பெற்றோர் சங்க தலைவர் பொருட்கள் தருவதாக உறுதியளித்துள்ளார், எனவே அதனை நாங்கள் உங்கள் பள்ளியினில் மாணவர்களின் பங்களிப்போடு அமைப்பதற்கு அனுமதி தரவேண்டும் எனக் கேட்டோம். நாளைக் காலை தலைமை ஆசிரியர் அவர்கள் வந்தவுடன் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினர். அன்று அவர்களிடத்திலிருந்து விடைபெற்றோம்.


பள்ளியின் முகவாயில் அருகில்
 வைக்கப் பட்டிருக்கும் மரக்கன்று

எங்கள் வறுமை போக்க வழி என்ன…


 
சுபஸ்ரீ
சுபஸ்ரீ கிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்துவரும் மாணவி, அவர்களது குடும்பம் தற்போது வாழ்வதற்கான வழி இல்லாமல் பல கஸ்ட நிலையில் இருப்பதாக அந்த சிறுமியின் பள்ளி ஆசிரியர் தெரிவித்து இருந்தார் அந்த வகையில் அவரை சந்திக்க சென்ற போது அங்கு அவரது அக்கா சுகன்யா ,(வயது -17) இருந்தார் அவர்களின் குடும்ப நிலை மிகவும் பின் தங்கியதாக இருக்கின்றது என்பதை அவர்களது இருப்பிடமும் அவர்கள் வீட்டில் எஞ்சியிருக்கும் சில பொருட்களுமே சாட்சியாக இருந்தன.

சுகன்யா
எம்மை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டு அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றிக் கேட்டேன். அப்பா தனபால் வயது 50 ஆக இருக்கும் போது கடந்த 6 மாதத்துக்கு முன்னர் ஆஸ்மா நோயினால் காலமாகிவிட்டார், அம்மா வனிதா வயது 42 அப்பாவின் இறப்புக்கு பின்னர் அருகில் இருக்கும் ஒருவரது வீட்டுக்கு காலையில் பாத்திரங்கள் கழுவும் வேலை செய்து வருகின்றார், இதன்மூலம் மாதம் இவர்களுக்கு 600 ரூபாய் கிடைக்கின்றது. அடுத்து சுகன்யா கிள்ளை மேல் நிலைப் பள்ளியில் 8 வது படித்ததுடன் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் சமையல் வேலை செய்து குடும்பத்தினரை பார்த்து வருகின்றார். இறுதியாக சுபஸ்ரீ கிள்ளை துவக்கப் பள்ளியில் 4 வது படிக்கும் 9 வயது சிறுமி.

ஆட்டு தொழுவமான அப்பாவின் தேனீர்க் கடை
இவர்கள் எல்லோரும் இருக்கும் வீடு ஒரு அறை மட்டும் கொண்டதான குடிசை வீடு கிள்ளையில் இருந்து பிச்சாவரம் செல்லும் பிரதான வீதியின் ஓரத்தில் அமைந்திருக்கின்றது. அருகிலே ஒரு பாழடைந்த குடிசை அது பற்றி சுகன்யாவிடம் கேட்டேன். எங்கள் அப்பா உயிருடன் இருக்கும் போது இதிலே தேனீர்க் கடை நடத்தி வந்தார். ஏழ்மை நிலை இருந்தாலும் குடும்பத்தில் அன்றாடம் உணவுக்கு என்றும் பஞ்சம் வந்ததில்லை அப்பா ஒருவரின் உழைப்பினை நம்பியே இந்த குடும்பம் சென்று கொண்டிருந்தது.

நான் உட்பட எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சளி இழுவை(ஆஸ்மா நோய் ) இருக்கின்றது. இந்த நோயின் காரணமாகவே அப்பா இறந்தார். அவரது இரப்புக்கு பின்னர் அன்றாடம் சமையல் செய்வதற்கு கூட முடியாத நிலை 2 மாதத்துக்கு முன்பிருந்துதான் அம்மா அருகில் உள்ள ஒரு வீட்டில் சமையல் பாத்திரங்களைக் கழுவிக் கொடுக்கும் வேலைக்கு சென்றுவருகின்றார். இப்போது இந்த தேநீர் கடையில் எங்கள் உறவினர் ஒருவரது 2 ஆடுகளைப் பராமரித்து வருகின்றோம் அவர் அந்த ஆடுகள் விற்கும் போது எமக்கும் கொஞ்சம் பணம் தருவதாக கூறி இருக்கின்றார் எனக் கூறி முடித்தார்.

அம்மா வனஜாவுடன் சுபஸ்ரீ
அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது வீட்டுக்கு வந்து சேர்ந்தார் சுபஸ்ரீ பள்ளியில் எம்மை பார்த்ததாக நினைவு கூர்ந்தார். அப்போது அவரிடம் அம்மாவை அழைத்துவரும்படி சுகன்யா அவர்கள் அனுப்பி வைக்க 10 நிமிடங்கள் கழித்து வந்து சேர்ந்தார். வனஜா 41 வயது என்பது அவரது தோற்றதில் இல்லை 60 வயதினைக் கடந்தவர்களைப் போல இருந்தார் காரணம் அவரது உடலில் உள்ள நோயின் தன்மையினால் இருக்கலாம். அவரிடம் வழமை போல் என்னை அறிமுகம் செய்தபோது அவரிடம் இருந்து பதில் இல்லாமல் மீண்டும் என்னவென்று கேட்டார் அப்போதுதான் சுகன்யா எங்க அம்மாவுக்கு காது கேட்காது சின்ன வயதில் இருந்து காது கேட்காததினால் அவர் வெளியில் எங்கும் செல்வதில்லை என்று கூறினார். அதன் அவரிடம் மண்ணிப்பு கேட்டுக் கொண்டு அவரிடம் அவர் நிலை குறித்து கேட்டேன். எனக்கு காது கேட்காதது என் கணவர் இருக்கும் வரை ஒரு பிரச்சனையாக படவில்லை ஆனால் இப்போதுதான் அதற்காக கவலைப் படுகின்றேன், கூடவே ஆஸ்மா நோய் இருப்பதனால் என்னால் எங்கு சென்றும் வேலை செய்ய முடியவில்லை என் மகள் வீட்டில் சமைத்து வீட்டினை பார்த்து வருகின்றாள் சின்னவள் படிப்பில் நல்ல கெட்டிக்காரி ஆனால் அவள் 5ம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க கூடிய வசதி என்னிடம் இல்லை அதனால்தான் அருகில் வேலை கேட்டு சென்ற போது இங்கிருக்கும் ஒருவர் தனது வீட்டில் காலையில் பாத்திரம் கழுவும் வேலை தந்தார் அதன் மூலம் தான் கொஞ்சம் பணம் கிடைக்கின்றது. எனது உறவினர் ஒருவரின் இரு ஆடுகளைப் பராமரித்து வருகின்றேன் இதனை அவர் விற்கும் போது கிடைக்கும் பணத்தினை தருவேன் என்றார். என சுகன்யா கூறியதை போன்று கூறினார்.

நீங்கள் ஏன் மறுபடியும் தேனீர் கடை நடத்த முயற்சிக்கவில்லை எனக் கேட்டபோது எனது உடல்நிலையை வைத்து புகை நெருப்பின் முன்னால் இருக்க முடியாது அதனால்தான் என்னால் செய்ய முடிய வில்லை எனக் கூறினார், எனது மகளுக்கும் இந்த ஆஸ்மா இருந்தாலும் அவள்தான் உணவு தயார் செய்கின்றாள் என்றார். என்ன வேலைகள் செய்வீர்கள் என்று கேட்ட போது வேலைக்கு போகும் அளவிற்கு உடல் நிலை இல்லை வீட்டில் இருந்து பார்க்கும் வேலை கூட செய்யும் அளவிற்கும் வீடு இல்லை. என்ன சார் செய்வது என்று எம்மிடமே அவர் கேட்டதில் நியாயம் இருக்கத்தான் செய்தது.

அவர்களிடத்தில் குழந்தையின் படிப்பினை நிறுத்தி விடாதீர்கள் அவர் தொடர்ந்து படிக்க எங்களால் இயன்ற உதவிகளை நிச்சயமாக உங்களுக்கு செய்வோம் என்ற உறுதியினைக் கூறி அவர்களிடத்தில் இருந்து விடைபெற்றோம். உழைக்க கூடிய உடல் ஆரோக்கியம் அவர்களிடத்தில் இல்லை, வீட்டிலிருந்து செய்யும் தொழிலுக்கும் வசதி இல்லை ஆனால் அடுத்தவர்களின் ஆட்டினை பராமரித்து வரும் இவர்களுக்கு சொந்தமாக எதாவது ஆடு கோழிகளை வழங்கினால் அதன் மூலம் இவர்கள் வருமானத்தினை பெற்று குடும்பத்தின் வறுமையினை போக்க முயற்சிக்கலாம் என்ற என்னமே இவர்களைப் பார்த்து வந்ததில் இருந்து என் மனதில் மேலோங்கி இருந்தது. இலவசமாக கால்நடை கொடுக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்கள் கூட அரசியல் செல்வாக்கினை தாண்டி இந்த ஏழை மக்களுக்கும் கிடைக்க முயற்சிப்பது இல்லை என்பதுதான் உண்மை..

கிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் SKILLS INDIA வினால் குழந்தைகள் பாராளுமன்றம் அமைக்கப்பட்டது


கிள்ளை துவக்கப் பள்ளி மாணவர்களும்
 ஆசிரியர்களும்
சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையம் செல்லும் வழியில் அமைந்துள்ள பரங்கிப் பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியமான கிள்ளை பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் தனது கல்வி வளர்ச்சிக்கான திட்டப் பணிகளை SKiLLS INDiA நிறுவனம் ஆற்றி வருகின்றது அந்த வகையில் குழந்தைகளின் குழுச் செயற்பாட்டுத் திறனை வளர்க்கும் குழந்தைகள் பாராளுமன்றம் என்ற அமைப்பினை ஆரம்பிப்பது தொடர்பாக நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்தேவன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் 10.09.2012 அன்று நேரமளித்து இருந்தார். அதன்படி அன்று பிற்பகல் 2.00 மணியளவில்  கூட்டம் ஆரம்பமானது பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. கெளரி அவர்கள் வரவேற்றார். அவரிடம் இதுபற்றி ஏற்கனவே அருள்தேவன் அவர்கள் பேசியிருந்ததினால் சுமார் 10 நிமிட நேரத்தில் மாணவர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் எம்மை அறுமுகம் செய்து வைத்தார் தலைமை ஆசிரியர் அவர்கள்.

குழந்தைகள் பாராளுமன்றம் தொடர்பாக
 ஸ்ரீதரன் அவர்கள் விளக்குகின்றார்
அவர்கள் 1-இல் இருந்து 5ம் வகுப்புவரையாக இருந்ததினால் அதிலிருந்து 3ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையான மாணவர்களுடன் கலந்துரையாடல் தொடர்ந்தது. பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் அவர்கள் பேசும் போது முதலில் அந்த பள்ளி வளாகத்தினை மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் பாராட்டினை தெரிவித்துக் கொண்டு இது போன்று உங்கள் பள்ளியின் எல்லா துறைகளிலும் உங்களை ஊக்கப்படுத்தும் செயற்பாடாக எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனமானது குழந்தைகள் பாராளுமன்றம் என்ற அமைப்பினை ஒவ்வொரு பள்ளியிலும் ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றது. இந்த அமைப்பினை உங்கள் பள்ளியிலும் செயற்படுத்துவதன் மூலம் உங்களது திறன்களையும் குழந்தைகளுக்கு இருக்கின்ற தலைமை தாங்கும் பண்பினையும் பள்ளியின் வளர்ச்சியினையும் ஒருமித்து அடைய முடியும் என்று கூறினார்.
  
அதன்பின் குழந்தைகள் பாராளுமன்றம் என்றால் என்ன அதன் கீழ் உள்ள அமைச்சர்கள் பற்றியும் அதன் ஒவ்வொன்றினது செயற்பாடுகள் பற்றியும் அதனை எப்படி குழந்தைகளாகிய நீங்கள் செய்ய முடியும் என்பது பற்றியும் அவர்களுக்கு புரிகின்ற வகையில் விளக்கமளித்தார். இந்த பாராளுமன்றம் உங்கள் பள்ளியில் செயற்பட உங்களுக்கு விருப்பமா என்ற கேள்விக்கு மாணவர்களின் ஒட்டுமொத்த குரலும் ஆமோதித்தன. அதன் பின்னர் பள்ளியின் ஆசிரியை சுமதி அவர்கள் இந்த பாராளுமன்றத்தின் பொறுப்பாசிரியராக தெரிவு செய்யப்பட்டார், அதனைத் தொடர்ந்து  4ம் 5ம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.


துறைகளின் அமைச்சர்கள் தேர்வு செய்யப் படுதல்
1.இதன் போது முதலில் கல்வித்துறை அமைச்சராக 5ம் வகுப்பை சேர்ந்த S. வைஷ்ணவி அவர்கள் தெரிவு செய்யப்பட்டார் அவருடன் உறுப்பினர்களாக அபினயஸ்ரீ -5, அபியுன்சல்மா-4, நிரஞ்சனா-4, ஜெகன் -5 ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

2.அடுத்து விளையாட்டுத் துறை அமைச்சராக 5ம் வகுப்பை சேர்ந்த ஸ்ரீநாத் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார், அவருடன் உறுப்பினர்களாக தினேஸ்-5, அபினயா-5 வைத்தியநாதன் 5, அஞ்சுகம்-5 ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

3.பின்னர் உடல்நலம் மற்றும் சுகாதாரத் துறையின் அமைச்சராக 5ம் வகுப்பை சேர்ந்த ப்ரீத்தி அவர்கள் தெரிவு செய்யப்பட்டார், அதன் உறுப்பினர்களாக தாரணி-5, பவித்ரா-4, பரமேஸ்வரி-5, நவின்ராஜ்-5 ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

4.இறுதியாக பசுமை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக  5ம் வகுப்பை சேர்ந்த அமர்நாத் அவர்கள் தேர்வானார் அவருடன் உறுப்பினர்களாக சந்தோஸ்குமார்-5, ஏழுமலை-5, தாரிபாபேகம்-4, S.K.பவித்ரா-4 ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு துறையின் அமைச்சர்களும்
 உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர்.
தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் அனைவரும் முன்பு வந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர், பின்னர் தாங்கள் இந்த பள்ளியின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்காகவும் செயற்படுவோம் என உறுதி எடுத்துக் கொண்டனர். பின்னர் தலைமை ஆசிரியர் திருமதி. கெளரி அவர்கள் பேசும் போது எங்கள் பள்ளியின் குழந்தைகள் மிகவும் திறமையானவர்கள் அவர்களை பல்வேறு வகையான திறன்களை வளர்க்கவேண்டும் என்ற முனைப்பில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அந்த வகையில் இந்த குழந்தைகள் பாராளுமன்றம் என்பது குழந்தைகளை மேலும் ஊக்கப் படுத்தும் ஒரு அமைப்பாக பள்ளியில் நிறுவப்பட்டதாக நான் நினைக்கின்றேன். இதை ஆரம்பிப்பதோடு நின்றுவிடாமல் நீங்கள் எங்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பினை ஆற்ற வேண்டும் என SKILLS INDIA நிறுவனத்தினை கேட்டுக் கொள்கின்றேன் எனக் கூறினார் பின்னர் பொறுப்பாசிரியர் சுமதி அவர்கள் இதன் பொறுப்பாசிரியாராக செயற்படுவதில் மிக்க மகிழ்ச்சி இந்த குழந்தைகள் பாராளுமன்றத்தினை அமைத்த தொண்டு நிறுவனத்தினருக்கு நன்றி இது போல எங்கள் பள்ளி வளர்ச்சிக்கு நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் எனக் கூறிமுடித்தார். 

பரங்கிப் பேட்டை ஊரட்சியின் கீழ் உள்ள கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் SKILLS INDIA’வினால் குழந்தைகள் பாராளுமன்றம் அமைக்கப் பட்டது.


SKiLLS INDiA தொண்டு நிறுவனம் கடலூர் மாவட்டத்தின் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள கிராமங்களின் கல்வி வளர்ச்சிப் திட்டப் பணிகளில் தன்னை இணைத்துப் பணியாற்றி வருகின்றது. அந்த வகையில் பள்ளி மாணவர்களிடம் கல்வி, விளையாட்டு, சுகாதாரம், சுற்றுச் சூழல், பேரிடர் மேலாண்மை போன்ற செயற்பாடுகளில் மேலதிக திறனை வளங்குவதற்காகவும் அதற்காக அவர்களை தகமை படுத்தும் செயற்பாடுகளை ஆற்றி வருகின்றது.


இவற்றில் ஒரு செயற்பாடாக குழந்தைகளின் கல்வி, விளையாட்டு, உடல்நலம் மற்றும் சுற்றுச் சூழல் குறித்து மாணவர்களை ஒரு அமைப்பு ரீதியாக செயற்படுத்தும் முறையாக குழந்தைகள் பாராளுமன்றம் என்னும் மாணவர்களுக்கான குழுச் செயற்பாட்டு அமைப்பினை பள்ளிகளில் அமைத்து அதன் மூலம் அவர்களின் திறமைகளை ஒவ்வொரு துறையிலும் வளர்க்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. கடந்த 10.09.2012 அன்று பரங்கிப் பேட்டை ஊராட்சியின் கீழ் உள்ள கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் பாராளுமன்றம் நிறுவப்பட்டது.

அன்று காலை கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் பாராளுமன்றம் அமைப்பதற்கான செயற்பாட்டினை கடலூர் மாவட்டத்தின் SKiLLS INDiA தன்னார்வ தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.அருள்தேவன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். காலை10.00 மணியளவில் நிறுவனத்தின் சார்பாக திரு.அருள்தேவன் அவர்களும், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்ரீதரன் அவர்களும் பள்ளிக்கு வருகை தந்தனர் அவர்களைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. மங்கயற்கரசி அவர்கள் வரவேற்றார்.

பின்னர் காலை 10.30 மணியளைவில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் வரவழைக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே அந்த பள்ளியில் கொடுக்கப் பட்ட பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது எடுக்கப்பட்ட ஒளிப் பதிவுகள் குறும் ஆவணப் படாமாக போட்டு காட்டப்பட்டது. அத்துடன் அவர்கள் பகுதியில் மாணவர்களின் கல்வி நிலை பற்றி எடுக்கப் பட்ட ஆவணப் படமும் திரையிடப் பட்டது. இதனை பார்வையிட்ட மாணவர்களுக்கு அவ்ர்களை திரையில் பார்த்தது அளவில்லாத மகிழ்ச்சியாக இருந்தது அத்தோடு மாணவர்களின் கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் பாடல்கள் போன்றன திரையிடப்பட்டது.


அதன் பின்னர் 5ம்- வகுப்பில் இருந்து 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மாத்திரம் அமர்த்தி அவர்களுக்கு குழந்தைகள் பாராளுமன்றம் அமைப்பது தொடர்பாக ஒருங்கினைப்பாளர் ஸ்ரீதரன் அவர்களும், அருள்தேவன் அவர்களும் பேசினர். குழந்தைகள் பாராளுமன்றம் என்றால் என்ன , அந்த பாராளுமன்றத்தில் உள்ள குழுக்கள் என்னென்ன அவற்றின் செயற்பாடுகள் என்னென்ன என்பது பற்றியும் அவர்களது பள்ளியின் வளர்ச்சியில் இந்த அமைப்பின் செயற்பாடு எவ்வாறான மாற்றத்தை கொண்டுவரும் என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த அமைப்பு முறை உங்கள் பள்ளியில் அமைக்க உங்களுக்கு விருப்பமா என மாணவர்களிடம் கேட்டபோது ஆம் என்று உரத்த குரலில் ஆர்பரித்தனர். அதன் பின்னர் குழந்தைகள் பாராளுமன்றத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சர் பதவிக்கும் அந்த அமைப்பின் கீழ் பணியாற்றும் மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
1.முதலில் கல்வி அமைச்சராக 7ம் வகுப்பின் ஸ்ரீகாந்த் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார் அவரின் கீழ் உறுப்பினர்களாக காவியா-, கிருத்திகா,
சரண்யா- , அம்மு, பவாணி, ரம்யா, M.ரம்யா, சந்துரு ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

2.அடுத்து விளையாட்டுத்துறை அமைச்சராக வீரம்மாள் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார் அவருடன் உறுப்பினர்களாக இளங்கோவன் , ரஞ்சிதா, சங்கீதா சத்தியா, சூர்யா, அங்கம்மாள், மாரியப்பன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
3. அதனைத் தொடர்ந்து பசுமை மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சராக 7ம் வகுப்பை சேர்ந்த இரம்யா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார் அவருடன் உறுப்பினர்களாக தேவி, கஸ்தூரி, வீரபாண்டியன், ராகவி, நிலா, சிவகாமி, பன்னீர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

4. இறுதியாக சுகாதாரத்துறை அமைச்சராக அனித்தா அவர்கள் தேர்வானார் அவருடன் உறுப்பினர்களாக ஆனந்தி, சங்கீதா, நிலா, ராஜேஷ், மகா, தேவயாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பொறுப்பாசிரியராக திரு. குப்புசாமி ஆசிரியர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். இவர்களுக்கு எல்லோருக்கும் தலைமையாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் இருப்பார் என் கூறப்பட்டது. அதன் பின்னர் பேசிய தலைமை ஆசிரியர் திருமதி. மங்கயற்கரசி அவர்கள் இந்த பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பணியாற்றி வரும் SKILLS INDIA நிறுவனத்தினருக்கு எங்களது நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். எங்கள் பள்ளியில் இவ்வாறான ஒரு குழந்தைகள் பாராளுமன்றம் அமைத்து அவர்களை நல்ல வழிகாட்டிகளாகவும் எல்லா துறையிலும் தேர்ந்தவர்களாக விளங்க நாங்கள் எப்போதும் செயற்படுவோம் அத்தோடு அவர்களின் செய்ற்பாடுகளுக்கு நிறுவனமும் துணையாக நின்று செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இறுதியாக பொறுப்பாசிரியர் திரு.குப்புசாமி அவர்கள் பேசினார் இந்த குழந்தைகள் பாராளுமன்றம் என்பது ஒவ்வொரு பள்ளியிலும் தேவையான ஒன்று இதனை அமைப்பாக மாற்றி அவர்கள் செயற்படுவதற்கு ஊக்கமளித்த தன்னார்வ நிறுவனத்தினருக்கு எங்கள் நன்றிகள். நீங்களும் எம்மொடு இணைந்து இந்த மானவர்களின் வளர்ச்சியில் செயற்பட வேண்டும் எங்கள் பள்ளியின் தரத்தினை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பின்னர் மாணவி அனித்தாவின் நன்றியுரையுடன் அன்றைய கூட்டம் முடிவுக்கு வந்தது.

  
        
.