Monday 28 January 2013

மலைவாழ் சிறுவர்களுக்கான புகைப்படம் மற்றும் காணொளி கருவிகள் கையாளும் பயிற்சி- Workshop on Community video production for children.

காலஓட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து செல்ல எல்லோராலும் முடிவதில்லை. புதுமைகளும், தொழில்நுட்ப மாற்றங்களும் நொடிக்கு நொடி மாறிக்கொண்டு இருக்கும் இந்த காலப் பகுதியில் மாறிவரும் தொழிநுட்பத்தின் ஆரம்ப கட்டங்களையாவது தெரிந்திராமல் இருந்தால் நாம் ஏதோ இந்த உலகத்தை விட்டு தள்ளிப் போனதான உணர்வு தோண்றுகின்றது. அதுதான் இன்றைய இளந்தலமுறை Twitter,Facebook என்று இருக்கும் காலத்தில் பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட கணிணிகளை தூசிபடியாமல் வைத்திருக்கும் மலைவாழ் பகுதி குழந்தைகளின் கல்வியில் தொழில்நுட்ப சாதனங்கள் என்பது எட்ட நின்று எட்டிப்பார்க்கும் விந்தைப் பொருளாகவே தோன்றுகின்றது.
மாகாளித்தொட்டி கிராமத்தில் மாணவர்களுக்கான புகைப்படகருவிப் பயிற்சி.

புகைப்படம் எடுப்பதைக் கற்க வரிசையில் 
 கடந்த வாரம் மாகாளித்தொட்டியில் மக்களின் பங்களிப்புடனான கிராமிய பகுப்பாய்வு நிகழ்வில் ஒரு மாணவனிடம் 9,10 வது படிக்க சத்தி சென்றுவிட்டு மீண்டும் ஏன் படிக்காமல் இங்கு வந்தாய் எனக் கேட்ட போது. எனக்கு அங்கிருப்பவர்கள் எல்லாம் என்னை விட எல்லாம் தெரிந்தவர்களாக இருக்காங்க.. எனக்கு அவங்க கூட ஒப்பிடும் போது எதுவும் தெரியல என்று தாழ்வு மனப்பான்மை மேலோங்க கூறினான். இந்த மாதிரியான எட்ட நின்று வேடிக்கை பார்க்க இவர்கள் கல்வி கற்க வில்லை. அவர்களையும் இந்த தொழில்நுட்ப யுகத்தின் அனைத்தையும் அறிந்திடும் வல்லவர்களாக மாற்ற வேண்டும். அதற்காக Skills India (ஸ்கில்ஸ் இந்தியா) இவர்களுக்கான புகைப்படம் மற்றும் காணொளி சாதனங்களை கையாளும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது. மாணவர்கள் கைகளில் பொருட்களைக் கொடுத்து அதை அவர்கள் சுதந்திரமான முறையில் அவர்கள் இயக்க பழகிக் கொள்வது. மற்றும் அதில் உள்ள தொழிநுட்ப விடையங்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது , அவர்களுக்கு என்னத்தில் தோன்றும் காட்சிகளை எப்படி படம்பிடித்து சேமிப்பது என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க முனைந்தோம்.
மாகாளித்தொட்டி மாணவர்கள் காணொளிப் பயிற்சியில் 

ஆர்வத்துடன் காணொளிப் பயிற்சி பெறும் மாணவிகள்

இதன் ஒரு பகுதியாகவே மாகாளித்தொட்டி, மாக்கம்பாளையம் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். நாங்கள் கற்றுக்கொடுக்க எவளவோ இருக்கும்  என்ற நினைப்பில் சென்ற எங்களின் எண்ணங்களை தகர்த்து எறிந்து வெகு சீக்கிரத்தில் அவர்கள் ஒவ்வொன்றையும் புரிந்து கொண்டது.. ஆச்சரியத்தின் உச்சி. அதன் காரணம் அவர்களது குழந்தைதனம். குழந்தைகளாக இருக்கும் போது எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம். அந்த ஆர்வம் அவ்ர்கள் மனதில் என்னால் இதனை இலகுவாக இயக்க முடியும் என்ற நம்பிக்கையும், இது பற்றி தெரிந்தவன் என்ற தைரியத்தையும் அவர்களுக்கு அளிக்கின்றது.
மாக்கம்பாளையம் மாணவர்கள் காணொளி இயக்குவது குறித்து ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர்

மாணவர்களுக்கு காணொளி குறித்து விளக்கம் அளிக்கும் பயிற்சியாளர் சிறிதரன்.

 அதன் பின்னர் அவர்கள் எங்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் குவித்தனர்.அவர்கள் எல்லோரிடமும் தொழில்நுட்ப வார்த்தைகள் சரளமாக வந்து விழுந்தன,( மிட் சாட், லாங் சாட், கவர் ஆகல, சூம் பண்ணவா?, என அவர்கள் கேட்டுக் கேட்டு செய்கின்ற போது மகிச்சியின் நரம்புகள் நம்மிடையே பற்றிக் கொள்கின்றது.ஆனால் இந்த பருவம் தாண்டி விட்டால் அவர்கள் இதை கற்றுக் கொள்வார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை.யாரோ ஒருவர் தொழிலுக்காக கற்றுக்கொள்ளலாம் அதை விடுத்து அவ்ர்கள் வளர்ந்த இடம் அவ்ர்களை தயக்கத்துடன் ஒதுங்கிச்செல்ல வைக்கும்.
மாக்கம்பாளையம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படம் எடுப்பது குறித்த பயிற்சி.

சக மாணவர் படம் எடுப்பதை ஆர்வத்துடன் பார்க்கும் மாணவர்கள்

இந்த முயற்சி இந்த மாணவர்களை தொழில்நுட்ப துறையில் ஆர்வத்தை மேலோங்க செய்வதும் அவர்களை வெளியுலக வாழ்க்கைக்கு அழைத்து வருவதற்குமான வாயிலாக கருதுகிறோம். இந்த முயற்சி மலைக் கிராமங்களின் எல்லா குழந்தைகளிடமும் அளிப்பதே எமது நோக்கம். இது நல்லதோர் ஆரம்பம்.....

மாணவர்கள் எடுத்தபுகைப்படக் கருவியில் சிக்கிய சில புகைப்படங்கள்.
பனி கொஞ்சும் மாக்கம் பாளைய மலைகள்

வற்றிப் போன மாக்கம் பாளையம் ஆறு

100 வயதைத் தாண்டியும் நடைபோடும் முதியவர்

பயிருக்கு உரமிடும் விவசாயி
சகமாணவர்களுக்கு போஸ் கொடுக்கும் கிராமிய மாடல்கள்

மாணவர்களின் அசத்தல் படம்

சக மாணவர் வீட்டில் தேநீர் அருந்துவதை சூம் செய்து எடுத்த படம்.


No comments:

Post a Comment