Monday 18 February 2019

திறன் பயிற்சியால் அழகுக்கலை நிபுணராக மிளிரும் ஈரோடு- பாக்கியலட்சுமி


திருமதி. பாக்கியலட்சுமி தன்னுடைய வெற்றிக்கதையை பகிர்ந்து கொள்கிறார். ஈரோடு, கொள்ளம்பாளையத்தை சேர்ந்த நான் B.Sc கணினி பட்டதாரி, பட்டப் படிப்பு முடிந்ததும் எனக்கு திருமணம் நடை பெற்றது, என் கணவர் தங்க நகை செய்யும் தொழில் செய்து வருகிறார், அதன் மூலம் மாதம் ரூபாய் :12000/- வருமாம் கிடைக்கிறது.

எங்களுக்கு ஒரு குழந்தை மற்றும் என் மாமியார் என என் குடும்பத்தில் மொத்தம் 4 பேர். இந்த சூழ்நிலையில் நானும் ஏதாவது வேலை செய்தால் குடும்ப வருமானத்தை அதிகரிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது அப்பொழுது தான் ஈரோடு  CSI வளாகத்தில் உள்ள Skills India Foundation- Erode பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக பத்திரிகை விளம்பரத்தில் படித்தேன். அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை கேட்டறிந்து ,உதவி அழகுக்கலை நிபுணர்  பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.

290 மணிநேரம் கொண்ட பயிற்சியை 2.5 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திருமதி. வாஹிதா பேகம் அவர்கள் எல்லோருக்கும் இலகுவாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தினார்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன் , அதன் பின்னர் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலை கிடைத்து Assisstant Beautician ஆக பணி செய்து வருகிறேன் மாதம் ஒன்றிற்கு 10000/- வரை சம்பளம் கிடைக்கிறது. இந்த வருமானம் சொந்தமாக பார்லர் வைத்தால் மேலும் அதிகரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தொழில் திறன் பயிற்சி என்னை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது,  எனக்கு இந்த வாய்பை அளித்த Skills India Foundation -Erode தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment