Monday 18 February 2019

தொழில் திறன் பயிற்சியால் சாதிக்கும் ஈரோடு-சுபத்திரா


சுபத்திரா , ஈரோடு மாவட்டம், சிதம்பரம் காலணியில் வசித்துவருபவர் மத்திய அரசின் PMKVY தொழில்த்திறன் பயிற்சியால் தான் சாதித்த கதை பற்றி கூறுகிறார்.

நான் கல்லூரியில் இளநிலை பட்டம் முடித்தஇருக்கிறேன் ,திருமணம் ஆகிவிட்டத்து ,எனக்கு ஒரு குழந்தை இருக்கின்றது ,எனது கணவர் தனியார் மருத்துவனை ஒன்றில் Lab technician ஆக பணி புரிகிறார், மாதம் 10,000 ரூபாய் வருமாணம் கொண்ட எங்களது குடும்பத்திற்கு வீட்டு வாடகை , மாத செலவுகள் , குழந்தையின் படிப்பிற்கு என்று போதுமானதாக இருக்கவில்லை. வீட்டின் வருமானத்தைப் பெருக்க நானும் வேலைக்கு செல்லலாம் என்று  பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன், 6000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்கவில்லை கிடைத்தாலும் அதிக நேரமும் தூரமும் உள்ளதாக அமைந்தது.

வீட்டில் குழந்தையை விட்டு இருவரும் வெளியில் வேலை செய்யமுடியாத சூழலில்  இருந்தேன், அந்த நேரத்தில் தான் தொலைக்காட்சி விளம்பரத்தில் Skills India Foundation –Erode பயிற்சி மையம் இலவச பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறுவதாக பார்த்தேன். நானும் எனது தோழி பிந்துவும் இணைந்து பயிற்சி மையம் சென்று விசாரித்தோம் , பயிற்சி மைய நிர்வாகி ஸ்டீபன் ராஜ் சார் அவர்கள் , பயிற்சிகள் குறித்தும் பயிற்சியின் பின்னான தேர்வு குறித்தும் ,சான்றிதல் குறித்தும் எடுத்து கூறினார்.

இருவரும்  தையல் பயிற்சிக்கு விண்ணப்பித்தோம் 3 மாத காலம் (380 மணி நேரம்) பயிற்சி நடத்தப்பட்டது , பயிற்சி ஆசிரியர் புஸ்பம் அவர்கள் மிகவும் திறன்படவும் நேர்த்தியாகவும் எங்களுக்கு கற்றுத்தந்தார்கள். பயிற்சியின் போது சங்கீதா, ஸ்டெல்லா ஆகிய இருவர் எனக்கு நல்ல தோழிகள் ஆனார்கள்.

பயிற்சியின் முடிவில் நடத்தப்பட்ட செயன்முறை மற்றும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடந்து மத்திய அரசின் சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன், பயிற்சி மையத்தினால் வழங்கப்பட்ட அறிவுரையின் படி எனது பெயரில் ஒரு தையல் கடை ஒன்றை MSME இல் பதிந்து கொண்டேன், அதன் பின்னர் வங்கிக் கடன் மூலம் தையல் மிசின் ஒன்றை வாங்கி தற்போது கம்பனிகள் மூலம் வரும் work order களை செய்து கொடுத்து வருகிறேன் ,அத்துடன் அருகில் இருப்பவர்களுக்கும் தேவையான உடைகளை தைத்துக் கொடுத்து வருகிறேன் , இதன் மூலம் மாதம் ஒன்றிற்கு 10000 ரூபாய்வரை என்னால் வருமானம் ஈட்ட முடிகிறது. அத்துடன் வீட்டில்  இருந்தபடியே வேலை என்பதால் என் குழந்தையையும் வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்ள முடிகிறது.

எனது வருமானமும் சேர்த்து இன்று எங்கள் குடும்பத்தை நல்ல நிலையில் கொண்டு செல்ல முடிகிறது, இந்த மகிழ்ச்சிகரமான மாற்றங்களை என் வாழ்வில் ஏற்படுத்திய மத்திய அரசின் (PMKVY) பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation-Erode பயிற்சி மையத்திற்கும்  பயிற்றுவித்த ஆசிரியருக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

No comments:

Post a Comment