Friday 30 November 2012

வரைபடக் கல்வி- கடலூரில் பள்ளிகளில் ஸ்கில்ஸ் இந்தியாவின் பணி-India Map and Science pictures drawn in Schools ,School development project,Cuddalore District

கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பின் தங்கிய மீனவ கிராமங்களிலும் கடலோர குடியேற்றக் கிராமங்களிலும் ஸ்கில்ஸ் இந்தியா தனது பள்ளிகளுக்கான செயற்திட்டப் பணிகளைச் செய்து வருகின்றது இந்த பகுதிகளில் உள்ள 20 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் கல்வியினையும் அவர்களது ஏனைய திறன்களை வளர்க்கின்ற செயல்களையும் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. 

கடந்த மாதம் அங்குள்ள பள்ளிகளில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான ஒரு பணியாக பள்ளிகளின் சுவர்களில் தேசவரைபடம் மற்றும் மாணவர்களின் மனதில் இலகுவாக சென்று சேரும் வகையில் அறிவியல் சார்ந்த படங்களை வரைவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் பெயரில் பள்ளியின் தலைமை ஆசிரியர்களின் அனுமதி பெற்று மாணவர்கள் அதிகமாக பார்வையிடக் கூடிய இடங்கள் தெரிவு செய்யப்பட்டு அங்கு அவர்களுக்கு தேவையான படங்கள் வரையப் பட்டன இருபது பள்ளிகளிலும் இந்த பணி நடைபெற்று வருகின்றது.






இந்த வரைபடங்கள் தமக்கு இலகுவாக ஞாபகத்தில் வரும் வகையில் இருப்பதாகவும் பள்ளி நேரம் முடிந்த பின்பு விளையாடும் போதும், பள்ளிக்கு வரும் போதும் போகும் போதும் பார்த்து பார்த்து தமக்கு மனதில் இலகுவாக பதிந்து விட்டதாக கூறுகின்றனர். இந்த பணியினை பள்ளிகளில் செய்து தந்தமைக்கு ஸ்கில்ஸ் இந்தியா ( Skills India ) விற்கு நன்றியினைக் கூறுவதாக பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கூறினர்.


No comments:

Post a Comment