என் பெயர் திருமதி. சலீலா, நான் கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர்
பகுதியில் வசித்து வருகிறேன்.நான் BA வரை படித்துள்ளேன்,எனக்குத் திருமணம் ஆகி கணவருடன்
வசித்து வருகிறேன், கணவர் வேலைக்குச் சென்ற பின் வீட்டில் தனியாக இருக்க மிகவும் கடினமாக
இருந்தது அதனால் எதாவது வேலைக்குப் செல்லாம் என்றால் எங்கள் பகுதியில் என் படிப்புக்
ஏற்ற வேலை எதுவும் கிடைக்கவில்லை.
அப்பொழுதுதான் Skills India
Foundation- Malaiyadi பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY)
திறன் மேம்பாட்டு திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின்
மூலம் குறுகிய கால இலவச தையல் தொழில்
பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தொலைக்காட்சி விளம்பரம் மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர் பயிற்சிமையம் சென்று பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்
திரு. ராஜா ரெக்சின் அவர்களின் மூலம் விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.
28/05/2019 அன்று தொடங்கிய
பேட்ஜில் எனது பயிற்சி வகுப்புகள் ஆரம்பமானது 380 மணி நேரம் (2 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர்
திருமதி .பிகா புஷ்பா மேடம் அவர்கள் தையல் வகைகள்,
பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து
, வெட்டி தைப்பது என பல தையல் பயிற்சி கற்றுக் கொடுத்தார். பயிற்சியின் போது நிறைய
தோழிகளும் கிடைத்தனர். பயிற்சியில் ஒரு பகுதியாக தொழில்சாலை களுக்கு அழைத்து சென்று
பயிற்சி அளித்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற
தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய திறன் மேம்பாடு
மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக்
கொண்டேன். இப்பொழுது அனைத்து தையல் வகைகளும் எளிமையாகத் தைக்கத் தெரியும் என்பதால்
என் பயிற்சி நிறுவணத்தின் உதவியினால் நான்
தனியாக தையலகம் வைத்து நடத்தி வருகிறேன். இதன் மூலம் மாத வருமாணமாக 13000/- மேல் சம்பாதிக்க
முடிகிறது. மேலும் நிறைய வேலை வாய்ப்பையும் என்னால் உருவாக்கித் தர முடியும். இதன் மூலம் என் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த தமிழ்நாடு
ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்ரேசனுக்கும்(TNSDC), Skills India Foundation
Malaiyadikum , பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ரெக்சிலினுக்கும் மற்றும் எனது பயிற்சி
ஆசிரியை திருமதி. பிகா மேடத்திற்குமெனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment