என் பெயர் சுகதேவி, நான்
ராஜபாளையத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன், +2 வரைப் படித்துள்ள
எனக்கு ஏதாவது தொழில் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசை அப்பொழுது தொலைக்காட்சி
விளம்பரம் மூலம் தமிழ்நாடு திறன் பயிற்சி மேம்பாட்டுத்
கழகத்தின் மூலமாக (பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பாக PMKVY
2.0) Skills India Foundation Rajapalayam நிறுவணம் குறுகிய கால திறன் பயிற்சிகளை அளிப்பதாக
அறிந்து கொண்டேன்.
அதன் பின் பயிற்சி மையத்திற்கு
சென்று விபரங்கல் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன். பின் Sewing Machine
Operator என்ற பயிற்சியை தேர்வு செய்தேன். பயிற்சி காலம் தொடங்கியவுடன் பயிற்சி மையத்திற்கு
தொடர்ந்து சென்று பயிற்சிகளை ஆர்வமாகவும், முறையாகக் கற்றுக் கொண்டேண். இதற்கு முன்
எனக்கு Sewing Machine பரிட்சயம் இல்லாத ஒன்று,ஆனால்340 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .காயத்திரி மேடம் அவர்கள் தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்.
இதன் மூலம் என்னால் திறம்பட பயிற்சியை கற்றுக்கொள்ள முடிந்தது.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து தமிழ்நாடு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது ஒரு Sewing Machine வாங்கி வீட்டில் இருந்தே
அனைத்து வகையான ஆடைகளையும் அண்டை வீடுகளுக்குத் தைத்துக் கொடுக்கிறேன். இதன் மூலம்
மாத வருமாணமாக மாதம் 6000/- சம்பாதிகிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி
அளிக்கின்றது.
இந்த வாய்ப்பு தமிழ்நாடு
PMKVY
தொழில் திறன் பயிற்சியினால் எனக்கு கிடைத்தது என்றால் மிகையாகாது. Skills India Foundation Rajapalayam நிறுவணத்திற்கும் என்னுடைய மணமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment