Tuesday 4 December 2018

தொழில் திறன் கல்வியால் தயக்கதை தவிடு பொடியாக்கிய – கூடல் நகர் செல்வி


என் பெயர் செல்வி , செல்லயா வீதி, கூடல் நகர், மதுரை என்ற முகவரியில் வசித்து வருகிறேன். நான், என் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் என நான்கு பேர் கொண்டது என் குடும்பம்

கணவர் மின்சார வாரியத்தில் ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர், அவரின் ஓய்வூதியத்தில் தான் எங்களது குடும்பம் நடத்தினோம் 11  ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த எனக்கு எதிலும் ஒரு தயக்கம் இருக்கும் அதனால் நான் வீட்டை விட்டு வெளியே செல்லவதையே தவிர்ப்பேன். இந்த நிலையில் தான் ரோஸி என்பவர் மூலம் Skills India Foundation-Koodal Nagar பயிற்சி  மையத்தில் பிரதம மந்திரியின்(PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகியகால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக கூறினார்.

பின்னர்  கூடல் நகர்,  சொக்கலிங்கா வீதியில் உள்ள Skills India Foundation Koodal Nagar பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன். திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஜெனட்மேடம் அவர்கள் எடுத்துக்கூறினார்கள், அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன். 380 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .ரீடாமேரி மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல சுவாரசியமாக தையல்  பயிற்சி நடந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தையல் கலைஞராக பணியாற்றுகிறேன். இதன் மூலம் மாத வருமானமாக மாதம் 6000/- சம்பாதிகிறேன்.  இதனால் எனது குடும்ப சூழலில் சற்று முன்னேற்றமான பாதை காணப்படுகிறது. மற்றும் எந்த வித தயக்கமும் இன்றி என்னால் வெளியில் சென்று வர முடிகிறது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation –கூடல் நகர் பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி  ஜெனட்மேடம் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார்திருமதி. ரீடா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

No comments:

Post a Comment