Tuesday 4 December 2018

பென்னாகரம் – திருமதி.கவிதா வின் கனவை நனவாக்கிய பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டம்.


பென்னாகரம் – 34, முள்ளுவாடி யில் வசித்து வரும் திருமதி.கவிதா பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டம் மூலம் தன்னுடைய கனவு நனவான ருசிகரமான தகவலை பகிர்ந்து கொள்கிறார்.

8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர், கணவர் திரு. ரவிச்சந்திரன் உள்ளூரில் உள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் இதன் மூலம் மாத வருமாணமாக ரூ.10000/- கிடைக்கிறது. இந்த வருமாணம் குடும்ப செலவுக்கு போதுமானதாக இருந்தாலும். எதிர் கால சேமிப்பு என்பது இல்லாத சூழல் இருந்தது வந்தது, எனக்கு சிறு  வயது முதல் தையல் கற்றுக் கொள்ள வேண்டும் அதன் மூலம் வருமாணம் ஈட்ட வேண்டும் என்ற கனவு இருந்தது.

 அப்பொழுதுதான் எனக்கு Skills India Foundation-Pennagaram   பிரதம மந்திரியின்  (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டம் பற்றி சுவரொட்டி  விளம்பரம் மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர்  Skills India Foundation Pennagaram பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு     அறிந்து கொண்டேன்.

திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்   திரு.கென்னடி சார் அவர்கள் எடுத்துக்கூறினார்கள்,அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.380 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி . பெருசியா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல தையல் நுட்பங்களை கற்றுக்கொடுத்தார். பயிற்சியின் போது நிறைய தோழிகளும் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டு பின்னர்  ஒரு  தையல்மிசின்   ஒன்றை வாங்கி தைக்க ஆரம்பித்தேன், என் தொழில் திறனால் எனக்கு மாதம் ஒன்றிற்கு 8000/- க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. இதனால் நான் எனக்கான சொந்த தொழிலை அமைத்துக் கொண்டேன். என் கனவும் நனவாகியது.

.என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation - PENNAGARAM  பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.கென்னடி சார் அவர்களுக்கும் பயிற்சி ஆசிரியர் திருமதி. பெர்சியா  அவர்களுக்கும் என்  நன்றிகளை தெரிவிக்கிறேன்.
  

No comments:

Post a Comment