Tuesday 4 December 2018

தொழில் திறன் கல்வியால் வாழ்க்கையில் சாதித்த – கரிசல்குளம் ஜெயா


என் பெயர் ஜெயா 4, பாண்டியன் வீதி, விழாங்குடி, மதுரை என்ற முகவரி யில் வசித்து வருகிறேன். நான், என்கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் என நான்கு பேர் கொண்டது என் குடும்பம். கணவர் சொந்தமாக சிறு தொழில் ஒன்றை செய்து வருகிறார், அவரின் வருமானத்தில் தான் எங்களது குடும்பம் நடத்தினோம்.


    12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை அதனால் நான் வீட்டு வேலையை முடித்துவிட்டு வீட்டில் பொழுதை களித்துக் கொண்டிருந்தேன், என்னுடைய வாழ் நாள் இப்படியே கழிந்து விடுமோ என்ற மனஅழுத்ததில் இருந்தேன். அப்பொழுது தான் என் வாழ்வில் வசந்தம் என்னுடைய பழைய பள்ளி தோழி மூலம் வந்தது.

 என்னுடைய தோழி Skills India Foundation KoodalNagar  பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின்(PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாகவும் தான் கற்றுக் கொண்டதாகவும் கூறினாள். பின்னர்  கூடல்நகர், சொக்கலிங்கா வீதியில்  உள்ள  Skills India Foundation Koodal Nagar    பயிற்சி  மையத்திற்கு சென்று விபரங்கள்   அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

      திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஜெனட்மேடம்அவர்கள் எடுத்துக்கூறினார்கள்,அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.380 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .ரீடாமேரி மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவணத்தில் தயல் கலைஞராக பணியாற்றுகிறேன். இதன் மூலம் மாத வருமாணமாக மாதம் 6000/- சம்பாதிகிறேன்இதனால் எனது குடும்ப வருமாணம்அதிகரித்துள்ளது. மற்றும் என்னுடைய தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation –Koodal Nagar பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி  ஜெனட்மேடம் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி. ரீடா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.


No comments:

Post a Comment