Wednesday 5 December 2018

தொழில் திறன் கல்வியால் வாழ்க்கையின் வெற்றி படிக்கட்டுகளில் அடி எடுத்து வைத்திருக்கும் ஈரோடு- திருமதி . துளசிமணி

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்என்ற வரிகளை நிருபித்துக் காட்டியிருக்கிறார் தொழில் திறன் கல்வியால் வாழ்க்கையின் வெற்றி படிக்கட்டுகளில் அடி எடுத்து வைத்திருக்கும் ஈரோடு- திருமதி . துளசிமணி

 என் பெயர் துளசிமணி, என்கணவர் மற்றும் நான் மட்டும் உள்ள என் குடும்பத்தில். கணவர் சொந்தமாக சிறு தொழில் ஒன்றை செய்து வருகிறார், அவர் வேலைக்கு சென்ற பின் எனது ஓய்வு நேரத்தில் சிறிய அளவில் அழகு சாதன கைவினைப் பொருட்கள் செய்து விற்பனை செய்வதன் மூலம் சிறிய அளவில் வருமாணம் ஈட்டி வந்தேன். ஆனால் அந்த வருமாணம் என்னுடைய சுய முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை.

டிப்பளமோ படித்துள்ள எனது படிப்பிற்கான வேலையும் தேடி எங்கு அலைந்தும் கிடைக்க வில்லை அந்த நிலையில் ஈரோடு மாவட்டம் ப்ரப் ரோட்டில்  CSI வளாகத்தில் இயங்கிவரும் ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசனில்   PMKVY பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது குறித்து தொலைக்காட்சி விளம்பரத்தில் பார்த்தேன்.

அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று மையத்தின் நிர்வாகி ஸ்டீபன் ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் படி உதவி அழகுகலை நிபுணர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து 3 மாதகாலம் (290 மணி நேர பயிற்சி) பயிற்சியில் கலந்து கொண்டேன் , பயிற்சிக்காலத்தில் தொழில்முனைவோருக்கான பயிற்சி , திறன் போட்டிகள் , கலை நிகழ்வுகள் என அனைத்து நிகழ்வுகளும் சிறப்பான முறையில் நடந்தது  மறுபடியும் சில காலம் கல்லூரியில் படித்தது போன்று உணர்வு.

பயிற்சியின்  போது எனது அழகுக்கலை பயிற்சி ஆசிரியர் திருமதி.வாஹிதா பேஹம் அவர்கள் எங்கள் அனைவருக்கும் திறன்பட அனைத்து வகையான தெரப்பிகள் மற்றும் அலங்காரங்களையும் கற்றுக் கொடுத்தார். பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து பின்னர் பயிற்சி வளாக மையத்தில் நடபெற்ற வேலைவாய்ப்பு தேர்வில் தெரிவாகி தற்போது  ஈரோடு நகரப் பகுதியில் இயங்கிவரும் பியூட்டி பார்லரில் மாதம் ஒன்றிற்கு 6000/- ரூபாய் வருமானத்துடன் பணியில் இருக்கிறேன். அது மட்டுமல்லாமல் பிரைடல் மேக்கப் ,மெஹந்தி போன்ற வெளி வேலைகளுக்கும் சென்று சம்பாத்தியம் செய்ய முடிகிறது. இதன் மூலம் என்னுடைய தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

என் குடும்ப சூழ்நிலையில் எனது வேலையும் வருமானமும் எனக்கு மிகப்பெரும் பங்களிப்பாகவும் என் எதிர்காலத்தில் வேலை இல்லாத சூழ்நிலை ஏற்படின் சுயமாக தொழிலை ஆரம்பித்து செய்யும் அளவிற்கு திறமை உள்ளவளாகவும் இந்த தொழிற் பயிற்சி  மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை.


இந்த பயிற்சியினை வழங்கிய ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன் ஈரோடு பயிற்சி மையத்திற்கும் , மைய நிர்வாகி ஸ்டீபன் ராஜ் சார் அவர்களுக்கும், பயிற்சி ஆசிரியர் வாஹிதா பேஹம் அவர்களுக்கும் , வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி அம்சா மேடம் அவர்களுக்கும் மத்திய அரசின்  திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

No comments:

Post a Comment