Friday 15 March 2019

தொழில் திறன் பயிற்சியினால் சாதித்த சாந்தியின் வெற்றிக்கதை




திருமதி. சாந்தி  தன்னுடைய வெற்றிக்கதையைப் பகிர்ந்து கொள்கிறார், இனம்பூர், கும்பகோணம் என்ற பகுதியில் வசித்து வருகிறேன், 12 ஆம் வகுப்பு வரைப் படித்துள்ளேன், எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், கணவர் Tailor ஆக உள்ளார், அவரின் மாத வருமானம்12000/- எனக்கும் தையல் மீது ஆர்வம் உள்ளதால் கணவரின் தொழிலுக்கு உதவியாக இருப்பேன், ஆனால் எனக்கு சரியான தையல் தெரியாத காரணத்தால் நான் முழுவதுமாக அவருக்கு உதவி செய்ய முடியவில்லை, அதனால் நானும் தையல் கற்றுக் கொண்டால் எங்கள் தொழிலை மேலும் விரிவு படுத்த முடியும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். 

அந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் Skills India Foundation-Kumbakonam பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக எங்கள் ஊரில் உள்ள தொலைக்காட்சி விளம்பரத்தில் பார்த்தேன்.பின்னர் அவர்களைத் தொடர்புகொண்டு பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.
பயிற்சி மைய நிர்வாகி திருமதி-சரண்யா மேடம் அவர்களின் வழிகாட்டலிலும் எனது மனதுக்குப் பிடித்தமான Self Employed Tailor பயிற்சியை தேர்வு செய்து படித்து வந்தேன், எங்கள் எனது பயிற்சி ஆசிரியர் திருமதி. தமிழ் மணி அவர்கள் சிறப்பான முறையில் எங்களுக்கு வகுப்புகளை நடத்தினார்,  துணிகளை எவ்வாறு வெட்டுவது மற்றும் தைப்பது என மிக சிறப்பான முறையில் செயன்முறை பயிற்சி அளித்தனர்  380 மணி நேரம் கொண்ட பயிற்சியானது 3 மாதகாலம் தொடர்ச்சியாக சென்று கற்று வந்தேன்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சும் , வழங்கும் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன்.  அதன் பின்னர் என் கணவரின் தையல் கடையில் கணவருடன் பணியாற்றி வருகிறேன்.இதன் மூலம் எங்கள் குடும்ப வருமாணம் அதிகரித்துள்ளது.  இப்பொழுது என் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  இந்த மாற்றமும் எனது வேலையும் PMKVY தொழில் திறன் பயிற்சியினால் எனக்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பு என்றால் மிகையாகாது.
என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு இன்று பணி புரிந்து வருகின்ற பல ஏழை மாணவர்களின் வாழ்வை மாற்றிய மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் , பயிற்சி வழங்கிய Skills India Foundation Kumbakonam பயிற்சி மையத்திற்கும் எனது பயிற்சி ஆசிரியருக்கும் எனது நன்றிகள்


No comments:

Post a Comment