Thursday 14 March 2019

தொழில்திறன் பயிற்சியின் மூலம் குடும்பத்தை மேம்படுத்திய ரேவதியின் வெற்றிக்கதை




திருமதி. ரேவதி தன்னுடைய வெற்றிகதையை தானே விவரிக்கிறார். நான் 7 ஆம் வகுப்பு வரைப் படித்துள்ளேன், நான் மூங்கில்மடவு பென்னாகரம் என்ற பகுதியில் வசித்து வருகிறேன், எனக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் தினக்கூலி வேலைக்குச் செல்கிறார், அவரின் மாத வருமாணம் 9000/- கணவர் வேலைக்குச் சென்றபின் வீட்டில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன், இந்த நிலை எனக்கு வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்தியது, நான் சுயமாக ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று மிகவும் உறுதியாக இருந்தேன், ஆனால் என்ன தொழில் செய்வது என்று தெரியாமல் தினறிக் கொண்டிருந்தேன். 

அப்பொழுது தான் Skills India Foundation- Pennagaram தொழில் பயிற்சி மையத்தில், குறுகிய  கால இலவச தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தொலைக்காட்சி விளம்பரம் மூலம் அறிந்து கொண்டேன்.பின்னர்  பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள்  அனைத்தும் கேட்டு  அறிந்து  கொண்டேன். திட்டம்  குறித்து  பயிற்சி  மைய  ஒருங்கிணைப்பாளர் திரு.கென்னடி சார் அவர்கள் எடுத்துக்கூறினார்கள்,

அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.380  மணி  நேரம்  (3 மாதகால )  பயிற்சியில்  தையல்  பயிற்சி  ஆசிரியர்  திருமதி . பெருசியா  மேடம்  அவர்கள்   தையல் வகைகள் , பல் வேறு ஆடைகள்   வடிவமைத்தல் ,  எம்ப்ராய்டரி  வேலை,  அனைத்து  வகையான  ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல தையல் நுட்பங்களை கற்றுக்கொடுத்தார். மேலும் எனக்குப் பயிற்சி மையத்தில்,யோகா தினம், மகளிர் தினக் கொண்ட்டம்,என பயிற்சி மிகவும் சுவராசியமாக இருந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு , இப்பொழுது வீட்லேயே அருகில் இருந்து வரும் ஆர்டர்களை தைத்துக் கொடுக்கிறேன் மாதம் ஒன்றிற்கு 9000/- க்கு மேல் சம்பளமாகக் கிடைக்கிறது. இதன் மூலம் என்னுடைய குடும்ப வறுமை மாறி வளமாக உள்ளது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும்,Skills India Foundation-Pennagaram பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.கென்னடி சார் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி .  பெர்சியா  அவர்களுக்கும்  என்  நன்றி களை  தெரிவிக்கிறேன்

No comments:

Post a Comment