Friday 15 March 2019

தொழில் திறன் பயிற்சியின் மூலம் வாழ்க்கைக்கான இலக்கைப் பெற்ற பெண்னின் கதை



திருமதி. தேஜ்ஜஸ்வினி, கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்தவர், அவர்
தொழில் திறன் பயிற்சியின் மூலம் வாழ்க்கைக்கான இலக்கைப் பெற்ற கதையை அவரே கூறுகிறார். நான் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் திருமணம் நடை பெற்றது, அதன் பின்னர் கணவர் குழந்தைகள் என அன்றாட வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது Skills India Foundation- KAMysore ஐ சேர்ந்த அலுவலர்கள் எங்கள் பகுதியில் மத்திய அரசின் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி குறித்த பரப்புரைக்காக (Mobilization)  வந்திர்ந்தனர், 

அப்பொழுது அவர்கள் கேட்ட ஒரு கேள்வி இன்று என்னை ஒரு தொழில் முனைவோர் ஆக்கியது. ஆம் அவர்கள் உங்களுடைய இலக்கு என்னெவென்று கேட்டனர், அப்பொழுது என்னிடம் பதில் எதுவும் இல்லை. அந்த நிமிடம் தான் நான் ஒரு தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை ஆர்வமாகக் கேட்டறிந்து , Domestic Data entry Operator பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.

440 மணிநேரம் கொண்ட பயிற்சியை 4 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திருமதி. அம்பிகா அவர்கள் எல்லோருக்கும் எளிதாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தினார். பயிற்சியின் போது நடை பெற்ற யோக தினம், விளையாட்டு விழா,ஆகியவற்றில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் பெற்றுள்ளேன் பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன் ,அதன் பின்னர் சொந்தமாக Data Entry Work மூலம் மாதம் 20000/- மேல் சம்பாதிப்பதோடு, சிலருக்கு வேலை வாய்ப்பையும் அளிக்கமுடிகிறது.

இந்த தொழில் திறன் பயிற்சி என்னை போன்ற பெண்களுக்கு பெரும் உந்து சக்தியாக உள்ளது,  எனக்கு இந்த வாய்பை அளித்த Skills India Foundation -KAMysore தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.



No comments:

Post a Comment