Thursday 21 March 2019

திருமதி. சங்கீதாவின் தொழில் திறன் பயிற்சியின் மூலம் கிடைத்த வெற்றிக் கதை



திருமதி. சங்கீதா தன்னுடைய வெற்றிக் கதையை விவரிக்கிறார். நான் 10 ஆம் வகுப்பு வரைப் படித்துள்ளேன், கும்பகோணம் வளையாபட்டி பகுதியைச் சேர்ந்த எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் தினக்கூலி வேலை செய்து வருகிறார், கணவரின் அன்றாட வருமானத்தில் தான் குடும்பச்செலவு, குழந்தைகளின் படிப்பு பெற்றோர்களின் மருத்துவச் செலவு மற்றும் இதர செலவினங்களயும் சமாளிப்பது என்பது ஒரு குடும்பத்தலைவியா எனக்கு இருந்த மிகப்பெரிய சவால், இந்தச்சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்றால் என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். 

அப்பொழுதுதான் தையல் கற்றுக் கொண்டு தைக்கலாம் என்று முடிவு செய்தேன். அந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் Skills India Foundation-Kumbakonam பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக எங்கள் ஊரில் உள்ள தொலைக்காட்சி விளம்பரத்தில் பார்த்தேன்.பின்னர் அவர்களைத் தொடர்புகொண்டு பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

பயிற்சி மைய நிர்வாகி திருமதி-சரண்யா மேடம் அவர்களின் வழிகாட்டலிலும் எனது மனதுக்குப் பிடித்தமான Self Employed Tailor பயிற்சியை தேர்வு செய்து படித்து வந்தேன், எங்கள் எனது பயிற்சி ஆசிரியர் திருமதி. தமிழ் மணி அவர்கள் சிறப்பான முறையில் எங்களுக்கு வகுப்புகளை நடத்தினார்,  துணிகளை எவ்வாறு வெட்டுவது மற்றும் தைப்பது என மிக சிறப்பான முறையில் செயன்முறை பயிற்சி அளித்தனர்  380 மணி நேரம் கொண்ட பயிற்சியானது 3 மாதகாலம் தொடர்ச்சியாக சென்று கற்று வந்தேன்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சும் , வழங்கும் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன்.  அதன் பின்னர்  பயிற்சி மையத்தின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் திரு .ராமநாதன் சார் மூலம் நடை பெற்ற வளாகத் தேர்வில் வெற்றிபெற்று கும்பகோணத்தில்  உள்ள கார்மெண்ட்டில் Tailor ஆக பணி புரிந்து வருகிறேன்.

மாதம் ஒன்றிற்கு 15000/- சம்பளமாகக் கிடைகிறது இந்த வருமானத்தில் என் குடும்பத்தினருக்கு என்னாலான பொருளாதார உதவியை செய்யக் கூடிய நிலையில் இருக்கிறேன். இப்பொழுது என் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  இந்த மாற்றமும் எனது வேலையும் PMKVY தொழில் திறன் பயிற்சியினால் எனக்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பு என்றால் மிகையாகாது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு இன்று பணி புரிந்து வருகின்ற பல ஏழை மாணவர்களின் வாழ்வை மாற்றிய மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் , பயிற்சி வழங்கிய Skills India Foundation Kumbakonam பயிற்சி மையத்திற்கும் எனது பயிற்சி ஆசிரியருக்கும் எனது நன்றிகள்






No comments:

Post a Comment