Friday 15 March 2019

கூடல் நகர் சோபனாவின் வெற்றிக் கதை



திருமதி. சோபனா தன்னுடைய வெற்றிக் கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நான் மதுரை, கூடல்நகர், அப்பாதுரை நகர் 3 வது வீதியில் வசித்து வருகிறேன், 10ஆம் வகுப்பு வரைப் படித்துள்ளேன், திருமணமாகி இரண்டு குழந்தை கள் உள்ளனர், கணவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார், அவரின் மாத வருமானம்15000/- வீட்டில் வீணாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த எனக்கு அந்த சூழ்நிலையில் தான் விளம்பர சுவரொட்டி மூலம் Skills India Foundation- Koodalnagar பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தெரிந்து கொண்டேன். பின்னர்  கூடல் நகர், சொக்கலிங்கா நகர் பகுதியில் உள்ள Skills India Foundation- Koodal Nagarr பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.
திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஜெனட் மேடம் அவர்கள் எடுத்துக்கூறினார்கள், அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன். 380 மணி நேரம் (3 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .ரீடா மேரி மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். பின்னர் வீட்டில் ஆர்டர் களை வாங்கி தைக்க ஆரம்பித்தேன். இப்பொழுது பள்ளி மாணவர்கள் சீருடை ஆடர்களை நேர்த்தியாக தைத்து கொடுத்து வருகிறேன் , மாதம் ஒன்றிற்கு9000/- மேல் வருமானம் கிடைக்கிறது, இதன் மூலம் என்னுடைய குடும்ப வருமாணம் அதிகரித்துள்ளது.  இப்பொழுது என் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது.
என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும்  திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation – Koodal Nagar பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி ஜெனட் மேடம் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி. ரீடா மேரி அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன். 


No comments:

Post a Comment