Thursday 21 March 2019

திரு. அலஹாத் தின் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி



திரு. அலஹாத் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்து விட்டு ஒரு மலர் கொத்து செய்யும் அங்காடியில் வேலை செய்து அதன் மூலம் மாதம் 5000/- வருமானம் ஈட்டி வந்திருக்கிறார். தந்தை விவசாயம் செய்து வருகிறார்  அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் சொற்பம் தான். அலஹாதின் மனைவி, குழந்தைகள் மற்றும் தம் தந்தை குடும்பம் என மொத்தம் 9 பேர் கொண்ட குடும்பத்திற்கு இந்த வருமானம் போதுமானதாக இல்லை. 

அப்பொழுது தான் ஈரோடு  CSI வளாகத்தில் உள்ள Skills India Foundation- Erode பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக பத்திரிகை விளம்பரத்தில் படித்து தெறிந்து கொண்டார். அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை கேட்டறிந்து ,DTH Set Top Box – Installation & Service Technician  பயிற்சியை தேர்ந்து எடுத்தார்.

340 மணிநேரம் கொண்ட பயிற்சியை 2 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டார். பயிற்சி ஆசிரியர் திருமதி. மாயா அவர்கள் எல்லோருக்கும் இலகுவாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தியுள்ளார்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார் , அதன் பின்னர் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலை கிடைத்து DTH Set Top Box – Installation & Service Technician  ஆக பணி செய்து வருகிறார் மாதம் ஒன்றிற்கு 10000/- வரை சம்பளம் கிடைக்கிறது. இந்த வருமானம் மேலும் அதிகரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவிக்கிறார்.

இந்த தொழில் திறன் பயிற்சி அவரை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது,  அவர் இந்த வாய்பை அளித்த Skills India Foundation -Erode தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார்.


No comments:

Post a Comment