Friday 15 March 2019

செல்வி. சமினா வின் வெற்றிபடிக்கட்டு




செல்வி. சமீனா அவர்கள் தன்னுடைய வெற்றிக்கதையை பகிர்ந்து கொள்கிறார். பி.பி அக்கரஹாரம், ஈரோடு பகுதியை சேர்ந்த நான் BBM பட்டத்தாரி, பெற்றோர், உடன் பிறந்தவர்களுடன் சேர்த்து மொத்தம் 5 பேர் கொண்டது எங்கள் குடும்பம், தந்தை ஒரு உணவகத்தில் வேலை பார்க்கிறார், அவரின் மாத வருமானம் 10000/- இந்த வருமானத்தில்  தான் குடும்பம் நகர்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது தான் நானும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகரித்தது. 

அப்பொழுது தான் ஈரோடு  CSI வளாகத்தில் உள்ள Skills India Foundation- Erode பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தொலைக்காட்சி விளம்பரத்தில் பார்த்தேன். அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை கேட்டறிந்து ,Assistant Beautician  பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.
290 மணிநேரம் கொண்ட பயிற்சியை 2.5 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திருமதி. வஹிதா பேஹம் அவர்கள் எல்லோருக்கும் இலகுவாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தினார்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன் , அதன் பின்னர் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலை கிடைத்து Assisstant Beautician ஆக பணி செய்து வருகிறேன் மாதம் ஒன்றிற்கு 10000/- வரை சம்பளம் கிடைக்கிறது.விரைவில் சொந்தமாக ஒரு பார்லர் வைக்கத் திட்டமிட்டு உள்ளேன். இந்த வருமானம் சொந்தமாக பார்லர் வைத்தால் மேலும் அதிகரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தொழில் திறன் பயிற்சி என்னை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது,  எனக்கு இந்த வாய்பை அளித்த Skills India Foundation -Erode தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment