Wednesday 20 March 2019

தொழில் திறன் பயிற்சியின் மூலம் ஏற்றம் பெற்ற பென்னாகரம்- ஷாகின்னின் வெற்றிக் கதை



செல்வி. ஷாகின் தன் வெற்றிக் கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நான் 12 ஆம் வகுப்பு வரைப் படித்துள்ளேன், நூர்பாஷா ஏரிக்கரை வீதி, பென்னாகரம் என்ற பகுதியில் வசித்து வருகிறேன், என் தந்தை தான் குடும்பத்தில் வருவாய் ஈட்டுபவர், தந்தை காய்கறி விற்பனையாளர், அவரின் மாத வருமானம் 6500/- இந்த வருவாய் 5 பேர் கொண்ட குடும்பத்திற்குப் போதுமானதாக இல்லை,என் மேல் படிப்புக்கும் மேற்கொண்டு படிக்கவைக்க இயலவில்லை, எனக்கும் தையல் தொழில் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது, ஆனால் இலவச தையல் தொழில் பயிற்சி எங்கு கிடைக்கும் என்று தெரியாமல் இருந்தது,

அப்பொழுது தான் Skills India Foundation- Pennagaram தொழில் பயிற்சி மையத்தில், குறுகிய  கால இலவச தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தொலைக்காட்சிவிளம்பரம் மூலம் அறிந்து கொண்டேன்.பின்னர்  பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள்  அனைத்தும்  கேட்டு  அறிந்து  கொண்டேன். திட்டம்  குறித்து  பயிற்சி  மைய  ஒருங்கிணைப்பாளர் திரு.கென்னடி சார் அவர்கள் எடுத்துக்கூறினார்கள்,

அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.380  மணி  நேரம்  (3 மாதகால )  பயிற்சியில்  தையல்  பயிற்சி  ஆசிரியர்  திருமதி . பெருசியா  மேடம்  அவர்கள்   தையல் வகைகள் , பல் வேறு ஆடைகள்   வடிவமைத்தல் ,  எம்ப்ராய்டரி  வேலை,  அனைத்து  வகையான  ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல தையல் நுட்பங்களை கற்றுக்கொடுத்தார். மேலும் எனக்குப் பயிற்சி மையத்தில்,யோகா தினம், மகளிர் தினக் கொண்ட்டம்,என பயிற்சி மிகவும் சுவராசியமாக இருந்தது. அங்கு திருமதி. தஷினா என்ற தோழியின் நட்பும் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு , அருகில் இருக்கும் கார்மெண்ட்ஷில் டெய்லராக பணிபுரிகிறேன் மாதம் ஒன்றிற்கு 9000/- க்கு மேல் சம்பளமாகக் கிடைக்கிறது. இதன் மூலம் என்னுடைய குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும்,Skills India Foundation-Pennagaram பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.கென்னடி சார் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி.பெர்சியா  அவர்களுக்கும்  என்  நன்றிகளை  தெரிவிக்கிறேன்


No comments:

Post a Comment