Friday 15 March 2019

திறன் பயிற்சியின் மூலம் வெற்றி பெற்ற திருமதி. சுஜிதா ரமேஸ் வெற்றிக் கதை




திருமதி. சுஜிதா ரமேஸ் தன் வெற்றிக் கதையை விளக்குகிறார். நான் கர்நாடக மாநிலம், மைசூர் கல்யாணி நகரில் வசித்து வருகிறேன். 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன், எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் ஆடிட்டர் ஆக உள்ளார் அவருடைய மாத வருமானம் ரூபாய் 12000/-, இந்த வருமானம் இன்றய நவீன காலத்தில் 4  பேர் கொண்ட குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை, குடும்ப வருமானத்தை உயர்த்த வழி தேடிக் கொண்டிருந்த போது தான் Skills India Foundation- KAMysore பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தொலைக்காட்சி விளம்பரம் மூலம் தெரிந்து கொண்டேன் அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை கேட்டறிந்து , Domestic Data entry Operator பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.

440 மணிநேரம் கொண்ட பயிற்சியை 4 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திருமதி. அம்பிகா அவர்கள் எல்லோருக்கும் எளிதாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தினார். 

பயிற்சியின் போது நடை பெற்ற யோக தினம், விளையாட்டு விழா,ஆகியவற்றில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் பெற்றுள்ளேன் பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன் ,அதன் பின்னர் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலை கிடைத்து Data entry Operator ஆக பணியாற்றி வருகிறேன். இதன் மூலம் மாத சம்பளமாக ருபாய் 8500/ பெறுகிறேன். இது பணி நிரந்திரம் பெற்றபின் மேலும் அதிகரிக்கும்.

இந்த தொழில் திறன் பயிற்சி என்னை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது,  எனக்கு இந்த வாய்பை அளித்த Skills India Foundation -KAMysore தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment