Friday 15 March 2019

திறன் பயிற்சியின் மூலம் சோதனைகளை வென்ற நலினா வின் வெற்றிக் கதை




செல்வி. நலினா தன் வெற்றிக் கதையை பகிர்ந்து கொள்கிறார். கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டத்தை சேர்ந்த நான் 10  ஆம் வகுப்புவரை படித்துள்ளேன். என் தந்தை விவசாய வேலை செய்து வருகிறார், அந்த வருமாணம் எங்கள் குடும்பதிற்கு போதுமானதாக இல்லை. 

இந்த சூழ்நிலையில் Skills India Foundation- KAMysore பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக சுவரொட்டி விளம்பரம் மூலம் தெரிந்து கொண்டேன் அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை கேட்டறிந்து , Retail Sales Associate பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.

320 மணிநேரம் கொண்ட பயிற்சியை 2.5 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திரு. வினைய் அவர்கள் எல்லோருக்கும் எளிதாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தினார். பயிற்சியின் போது அளித்த களப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பயிற்சியின் போது திருமதி. பவானி என்ற தோழியின் அறிமுகமும் கிடைத்தது,இவர் பயிற்சி காலத்தில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன் ,அதன் பின்னர் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலை கிடைத்து Retail Assosiator ஆக பணியாற்றி வருகிறேன்.இதன் மூலம் எனக்கு மாத வருமாணமாக 9000/- கிடைக்கிறது. இந்த வருமாணம் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் துளிர் விட்டிருக்கிறது. இப்பொழுது என் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

இந்த தொழில் திறன் பயிற்சி என்னை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது,  எனக்கு இந்த வாய்பை அளித்த Skills India Foundation -KAMysore தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment