Friday 15 March 2019

தொழில் திறன் பயிற்சியின் மூலம் வெற்றி பெற்ற மெர்சி ப்யூலா வின் வெற்றிக்கதை




திருமதி. மெர்சி ப்யூலா தன் வெற்றிக்கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.  ஈரோடு கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த நான் பட்டப் படிப்பு வரை படிதுள்ளேன். எனக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தை கள் உள்ளனர், கணவர் மின்சாரத்துறையில் பணிபுரிகிறார். பட்டப் படிப்பு வரை படித்திருந்தாலும் திருமணம், குழந்தை வளர்ப்பு என நாட்கள் நகர்ந்து விட்டது, 

ஆனாலும் எனக்கு ஏதாவது ஒரு சுயதொழில் செய்ய வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தேன். அப்பொழுதுதான் ஈரோடு  CSI வளாகத்தில் உள்ள Skills India Foundation- Erode பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக பத்திரிகை விளம்பரத்தில் படித்தேன். அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை கேட்டறிந்து , Self Employed Tailor  பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.

380 மணிநேரம் கொண்ட பயிற்சியை 2 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திருமதி. புஷ்பா அவர்கள் எல்லோருக்கும் இலகுவாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தினார்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன் , அதன் பின்னர் சொந்தமாக தையல்கடை ஆரம்பித்து நடத்தி வருகிறேன் மாதம் ஒன்றிற்கு 10000/- வரை சம்பாதிக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தொழில் திறன் பயிற்சி என்னை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது,  எனக்கு இந்த வாய்பை அளித்த Skills India Foundation -Erode தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.



No comments:

Post a Comment