Wednesday 20 March 2019

தொழில் திறன் மூலம் தனக்குக் கிடைத்த வெற்றியைப் பகிர்கிறார் சந்திர பிரகாஸ்



திரு.சந்திர பிரகாஸ் தன்னுடைய வெற்றிக் கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். காசிபாளயம், ஈரோடு பகுதியை சேர்ந்த நான் BCA படித்து முடித்துள்ளேன், அப்பா நூலகர் அவருடய மாத வருமானம் குடும்பச் செலவுகளுக்கு மட்டும் போதுமானதாக இருந்து வந்தது, எனக்கும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாமல் இருந்து வந்தேன். 

அப்பொழுது தான் ஈரோடு  CSI வளாகத்தில் உள்ள Skills India Foundation- Erode பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தொலைக்காட்சி விளம்பரத்தில் பார்த்துத் தெறிந்து கொண்டேன். அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை கேட்டறிந்து ,DTH Set Top Box – Installation & Service Technician  பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.

340 மணிநேரம் கொண்ட பயிற்சியை 2 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திருமதி. மாயா அவர்கள் எல்லோருக்கும் இலகுவாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தினார்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன் , அதன் பின்னர் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலை கிடைத்து DTH Set Top Box – Installation & Service Technician  ஆக பணி செய்து வருகிறேன் மாதம் ஒன்றிற்கு 15000/- வரை சம்பளம் கிடைக்கிறது. இந்த வருமானம் மேலும் அதிகரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தொழில் திறன் பயிற்சி என்னை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது,  அவர் இந்த வாய்பை அளித்த Skills India Foundation -Erode தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment